மெரினாவில் 5 பேர் பலிக்கு உண்மையான காரணம் என்ன? உள்ளுறுப்புகள் விஸ்ரா ஆய்வுக்கு அனுப்பிவைப்பு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்வை பார்க்க வந்து உயிரிழந்த 5 பேரின் உடலில் மேற்கொண்ட உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதற்கட்ட காரணம் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அவர்களின் இறப்புக்கான துல்லியமான காரணத்தை கண்டறிய, சாம்பிள்கள் 'விஸ்ரா' ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படை தொடங்கப்பட்டு 92வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்திய விமானப்படை சார்பாக வான் சாகச நிகழ்ச்சி நேற்று முன்தினம் (அக்டோபர் 6) நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. இதைக் காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். இதனால் சென்னை முழுக்க கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடும் வெயிலால் பாதிப்பு: அதே நேரத்தில் சென்னையில் காலை முதலே வெப்பநிலை அதிக அளவில் இருந்ததால், விமான சாகசங்களை காண மெரினா கடற்கரைக்கு வந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடும் வெப்பத்தாலும், கூட்ட நெரிசலாலும் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
5 பேர் பலி: மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜான் (56) பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (48), சென்னை மடுவங்கவரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் (41), செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த மணி (59), திருவொற்றியூர் பகுதி சேர்ந்த கார்த்திகேயன் (34) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்த லட்சக்கணக்கான நபர்களில் 5 பேர் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து குறைந்து உடல்நலம் பாதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசு உரிய ஏற்பாடுகளைச் செய்யாததே உயிர் பலிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு அரசு கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை எனவும் கடும் வெப்பத்தினால் நீர் சத்து குறைந்து மயக்கம் அடைந்து உயிரிழந்து இருகின்றனர் எனவும் தெரிவித்தது. இதையடுத்து உயிரிழந்த நபர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
போலீஸ் விசாரணை: விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அண்ணா சதுக்கம் காவல்நிலையம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மெரினா காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 பேர் உயிரிழப்பு குறித்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழப்பு ஏற்பட்டது எதனால்?: இந்த நிலையில் உடற்கூராய்வில் உயிரிழப்புக்கான முதற்கட்ட காரணம் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சீனிவாசனின் இதயத்தில் அடைப்புகள் இருந்ததால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜான் என்பவர் குறை ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டு பின்னர் உயிரிழந்ததாகவும், தினேஷ்குமார், மணி ஆகியோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் உடற்கூராய்வில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விஸ்ரா ஆய்வு: மேலும், ஐந்து பேரும் உயிரிழந்ததற்கான துல்லியமான காரணத்தை கண்டறிய ஐந்து நபர்களின் உடல் உள்ளுறுப்பு சாம்பிள்கள் தடயவியல் துறையின் "விஸ்ரா" ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. "விஸ்ரா" (Viscera) ஆய்வு என்பது உடல் உள்ளுறுப்புகளின் திசுக்களை ஆய்வு செய்து இறப்புக்கான காரணத்தை கண்டறியும் வழிமுறை. இந்த ஆய்வின் முடிவில் பிரேத பரிசோதனையில் தெரியவந்த விஷயங்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற விவரம் தெரியவரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications