வரதட்சணை கொடுமையா - சித்ரா கணவரிடம் ஆர்டிஓ விசாரணை - சக நடிகர்களையும் விசாரிக்க முடிவு
சித்ராவை அவரது கணவர் வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினாரா என்பது பற்றி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்திடம் ஆர்டிஓ திவ்யஸ்ரீ இன்று விசாரணை மேற்கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தும் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, டிவி சீரியலில் சித்ரா உடன் நடித்த சக நடிகை, நடிகர்களிடமும் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்ரா மரணமடைந்து ஓரு வாரம் கடந்த நிலையிலும் அதிர்வலைகள் ஓயவில்லை. அவரைப்பற்றி செய்திகள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. சித்ராவும், ஹேமந்தும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் நடந்து சில மாதங்களே முடிந்துள்ள நிலையில் சித்ராவின் மரணம் நிகழ்ந்துள்ளதால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்பது பற்றி ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.
முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடமும், அதனைத் தொடர்ந்து மாமனார், மாமியாரிடம் விசாரணையை நடத்தியுள்ள ஆர்டிஓ திவ்யஸ்ரீ, அடுத்த கட்டமாக சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்துகிறார். இதற்காக பொன்னேரி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொடுமைப்படுத்திய ஹேமந்த்
தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோதுதான் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் காதல் மலர்ந்து அதுவே நிச்சயம் வரை சென்று பதிவு திருமணத்தில் முடிந்துள்ளது. சீரியல் நடிகை என்று தெரிந்துதான் திருமணம் செய்து கொண்டார் ஹேமந்த். தினசரியும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தள்ளியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதிவு திருமணம்
ஹேமந்த் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் என்றும் அதன்பிறகே சித்ராவை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் சித்ராவின் கணவரை கைது செய்த காவல்துறையினர் பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

ஹேமந்திடம் விசாரணை
காவல்துறையினர் கடந்த 6 நாட்களாக நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளாராம் ஹேமந்த். இந்த நிலையில் இன்று ஹேமந்திடம் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். இதற்காக பொன்னேரி சிறையில் இருந்த ஹேமந்த் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் மீண்டும் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்படுவார்.

நீடிக்கும் விசாரணை
சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தில் வீடு, கார் வாங்கியிருக்கிறார் சித்ரா. திடீரென திருமணம் செய்து கொண்ட சித்ராவை அவரது கணவரும் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களா என்ற கோணத்தில் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சித்ரா உடன் டிவி சீரியரில் நடித்த சக நடிகை, நடிகையர்களிடமும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications