Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரதட்சணை கொடுமையா - சித்ரா கணவரிடம் ஆர்டிஓ விசாரணை - சக நடிகர்களையும் விசாரிக்க முடிவு

சித்ராவை அவரது கணவர் வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினாரா என்பது பற்றி ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேமந்திடம் ஆர்டிஓ திவ்யஸ்ரீ இன்று விசாரணை மேற்கொண்டுள்ளார். வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தும் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, டிவி சீரியலில் சித்ரா உடன் நடித்த சக நடிகை, நடிகர்களிடமும் விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சித்ரா மரணமடைந்து ஓரு வாரம் கடந்த நிலையிலும் அதிர்வலைகள் ஓயவில்லை. அவரைப்பற்றி செய்திகள், புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன. சித்ராவும், ஹேமந்தும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணம் நடந்து சில மாதங்களே முடிந்துள்ள நிலையில் சித்ராவின் மரணம் நிகழ்ந்துள்ளதால், வரதட்சணை கொடுமை நடந்துள்ளதா என்பது பற்றி ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.

முதற்கட்டமாக, நடிகை சித்ராவின் பெற்றோரிடமும், அதனைத் தொடர்ந்து மாமனார், மாமியாரிடம் விசாரணையை நடத்தியுள்ள ஆர்டிஓ திவ்யஸ்ரீ, அடுத்த கட்டமாக சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்துகிறார். இதற்காக பொன்னேரி சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொடுமைப்படுத்திய ஹேமந்த்

கொடுமைப்படுத்திய ஹேமந்த்

தோழியின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றபோதுதான் சித்ராவுக்கும், ஹேமந்துக்கும் காதல் மலர்ந்து அதுவே நிச்சயம் வரை சென்று பதிவு திருமணத்தில் முடிந்துள்ளது. சீரியல் நடிகை என்று தெரிந்துதான் திருமணம் செய்து கொண்டார் ஹேமந்த். தினசரியும் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தள்ளியதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பதிவு திருமணம்

பதிவு திருமணம்

ஹேமந்த் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர் என்றும் அதன்பிறகே சித்ராவை காதல் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. வலுவான ஆதாரங்களின் அடிப்படையில் சித்ராவின் கணவரை கைது செய்த காவல்துறையினர் பொன்னேரி சிறையில் அடைத்தனர்.

ஹேமந்திடம் விசாரணை

ஹேமந்திடம் விசாரணை

காவல்துறையினர் கடந்த 6 நாட்களாக நடத்திய விசாரணையில் பல தகவல்களை தெரிவித்துள்ளாராம் ஹேமந்த். இந்த நிலையில் இன்று ஹேமந்திடம் ஆர்டிஓ விசாரணை நடத்துகிறார். இதற்காக பொன்னேரி சிறையில் இருந்த ஹேமந்த் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் மீண்டும் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்படுவார்.

நீடிக்கும் விசாரணை

நீடிக்கும் விசாரணை

சீரியலில் நடித்து சம்பாதித்த பணத்தில் வீடு, கார் வாங்கியிருக்கிறார் சித்ரா. திடீரென திருமணம் செய்து கொண்ட சித்ராவை அவரது கணவரும் குடும்பத்தினரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்களா என்ற கோணத்தில் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சித்ரா உடன் டிவி சீரியரில் நடித்த சக நடிகை, நடிகையர்களிடமும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+