நான் ஏற்கனவே சொன்தை தான் விஜய் பேசியிருக்கிறார்.. கார்த்தி சிதம்பரம் சொல்வதை கேளுங்க
சென்னை: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை நேற்று நடிகர் விஜய் சந்தித்து பாராட்டினார். மேலும் உதவித்தொகையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசிய சில கருத்துக்கள் தனது கருத்துடன் ஒத்துபோவதாக சிவகங்கை மக்களவை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், சினிமாவை தாண்டி பொது விவகாரங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தனது படத்தில் சில அரசியல் பஞ்ச் வைத்து பேசுவதோடு, ஊழல்கள் குறித்தும் பேசி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார். தனது மக்கள் இயக்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

ரத்த தானம் முகாம், பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 மதிப்பெண்கள் எடுத்த மாண-மாணவிகளை சந்தித்து பாராட்டு தெரிவித்து கல்வி உதவி தொகை வழங்க நடிகர் விஜய் முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வந்தனர்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 12 மணி நேரத்திற்கும் நேலாக கலந்து கொண்ட அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் விஜய் தனது கைகளினால் பாராட்டு சான்றிதழையும் ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஜய் மாணவ மாணவிகளுக்கு பல அட்வைஸ்களையும் செய்தார்.
குறிப்பாக 'காடு இருந்தா எடுத்துப்பாங்க... ரூபாய் இருந்தா பிடுங்கிப்பாங்க... ஆனால் படிப்பை மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது' என்று ஒரு படத்தில் 'டயலாக்' வரும். இது என்னை மிகவும் பாதித்த வரிகள் என்று அசுரன் படத்தின் வசனத்தை குறிப்பிட்டு கல்வியின் முக்கியத்தும் குறித்து பேசினார். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது எனவும் ஒவ்வொரு மாணவ-மாணவியரும் தங்கள் பெற்றொரிடம் இனிமேல் காசு வாங்கிட்டு ஓட்டு போடாதீங்க... அப்படின்னு சொல்லி பாருங்கள். சும்மா... முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முயற்சித்தால் அது கண்டிப்பாக நடக்கும்.
ஏனெனில் வரும் ஆண்டுகளில் நீங்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாக வரப்போகிறீர்கள். இதெல்லாம் எப்போது நடக்குமோ, அப்போதுதான் உங்கள் கல்வி முறையே முழுமை அடைவதாக எடுத்துக்கொள்ளலாம்" என்றார். மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் விஜய் பேசிய இந்தக் கருத்துகள் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. விஜயின் கருத்து குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரத்திலும் கிளம்பாமல் இல்லை.
இந்த நிலையில், சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் விஜய் பேசியது குறித்து கேட்டனர். அதற்கு கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:- நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா இல்லையா எனத் தெரியவில்லை. நல்ல அறிவுரைதான். பணம் வாங்கி ஓட்டு போடக்கூடாது என்று நான் சொல்லுகிறேன்.
என்னை பொறுத்தவரை கேஷ் ஃபார் வோட், காசு பணம் துட்டு மணி, மணி, சம்திங் சம்திங் என்பதுதான் தமிழக அரசியலையே தென்னக அரசியலையே உலுக்கிக் கொண்டு இருக்கிறது. அது இல்லாமல் ஒரு அரசியல் இருக்க வேண்டும் என்றுதான் நானும் சொல்லிக் கொண்டு வருகிறேன். அந்த கருத்தை விஜய் சொல்கிறார் என்றால் என்னுடைய கருத்துக்கு அவர் ஒத்துப் போகிறார் என்றுதான் அர்த்தம்" என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: ”பெரம்பூர், திருச்சி கிழக்கு” 2 தொகுதிகளில் விஜய் போட்டி -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான்












Click it and Unblock the Notifications