உதயநிதியும், சபரீசனும் பொன்முடியை பார்க்க ஏன் போகவில்லை? என் நாக்கு கருநாக்கு சார்! -வி.பி.துரைசாமி
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்ப்பதற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அமைச்சர் பொன்முடியை பார்ப்பதற்கு ஏன் செல்லவில்லை என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்தவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கும் போது என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பாட்டுப் பாடும் அமைச்சர் துரைமுருகன், அவர் வீட்டில் ரெய்டு நடத்தப்படும் போது சட்டி சுட்டதடா கை விட்டதடா என பாடுவாரா என வி.பி.துரைசாமி வினவினார்.

திமுகவில் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினர் சீட் எதிர்பார்த்த இவருக்கு அது கிடைக்கவில்லை. இதையடுத்து எல்.முருகனை அவரது இல்லம் தேடிச் சென்று நேரில் சந்தித்து பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு முக்கியப் பதவிகள் தரப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில் மாநில துணைத் தலைவர் பதவி மட்டும் தரப்பட்டது.
இந்நிலையில் திமுக அரசை கண்டித்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய வி.பி.துரைசாமி, திமுக மீதான தனது பழைய கோபத்தையெல்லாம் தீர்த்துக் கொள்ளும் வகையில் ஆவேசம் காட்டினார். திமுகவில் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும் எனவும் அதுவும் குறிப்பாக 26ஆம் தேதிக்குள் அது நடக்கும் எனவும் ஆருடம் கூறிய வி.பி.துரைசாமி, தனது நாக்கு கருநாக்கு என்பதால் தாம் சொல்லியது பலிக்கும் எனவும் தனது பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரிடம் கூறினார்.
போலீஸ் கஸ்டடியில் உள்ள ஒரு கைதியை நேரில் சென்று முதலமைச்சர் பார்த்த வரலாறு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் நடந்திருக்கிறது என சாடிய வி.பி.துரைசாமி, மோடி பிரதமரான பிறகு பாஜக உட்பட அனைத்துக் கட்சிகளின் அமைச்சர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் ஒரு பைசாவை இந்தியாவிற்கு வெளியே அனுப்பினாலும் யாரும் தப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications