Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூணாறிலிருந்து மெரினா வரை! ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவாரம் பற்றி ஞாபகம் இருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு காலத்தில் தமிழக காவல்துறையில் கம்பீர அதிகாரியாக வலம் வந்து, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வால்டர் தேவாரத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் இணக்கமாக பணியாற்றிய வால்டர் தேவாரம், சூட்டிங்கில் எக்ஸ்பர்ட் ஆக திகழ்ந்தவர். வீரப்பன் கூட்டாளிகள் 150 பேர் இருந்த நிலையில் 6 மாதத்தில் அதனை கால் வாசியாக குறைத்தவர். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது காவல்துறை பணிக்கு வந்தவர் படிப்படியாக உயர்ந்து தமிழக காவல்துறை தலைவர் பதவி வரை உயரம் தொட்டவர்.

Walter Devaram who wrote the book From Munnar to Marina

அதுமட்டுமல்ல தமிழக காவல்துறையில் பெண் காவலர்களை ஏன் நியமிக்க வேண்டும் என வால்டர் தேவாரம் 4 காரணங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றையும் அரசிடம் சமர்பித்தார். இன்று தமிழக காவல்துறையில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அதில் வால்டர் தேவாரத்தின் பங்களிப்பும் உள்ளது.

ஓய்வு பெற்று 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் 80 வயதை கடந்தும் இன்னும் திடகாத்திரமாக காணப்படுகிறார். இந்நிலையில் மூணாறிலிருந்து மெரினா வரை என்ற தலைப்பில் தனது சுயசரிதை மற்றும் கடந்து வந்த பாதை, நினைவலைகள் பற்றி வால்டர் தேவாரம் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அந்த புத்தகத்தின் பிரதியை வழங்கி படித்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதனிடையே மூணாறிலிருந்து மெரினா வரை என்ற புத்தகத்தின் சுருக்கம் பற்றிய விவரம் வருமாறு;

''மூணாறிலிருந்து மெரினா வரை என்ற இப்புத்தகத்தில் வால்டர் ஐ. தேவாரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம் மூணார் தேயிலைத் தோட்டத்தில் தொடங்கிய சிறுவயது நினைவுகளையும், கல்லுரிப் படிப்பை சென்னையில் தொடர்ந்தது பற்றியும் இராணுவத்தில் சேர ஆர்வம் கொண்டு, வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்று இம்பால் நகரில் சிறிதுகாலம் கல்லுரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டுப் பின்னர் அவரது இரண்டாவது தெரிவான இந்தியக் காவல் பணியில் சேர்ந்தது பற்றியும் அதன் பின்னர் கடந்த கால சம்பவங்களைப் பற்றியும் சுவராசியமாக எழுதியுள்ளார் அதை வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம்.''

''அவருடன் சேருங்கள் தமிழ்நாட்டுக் காவல் பணியில் பல ஆண்டுகள் வன்முறைக்கும்பல்களை அடக்கியதும், நக்சல் தீவிரவாதிகளை ஒழித்தது, வீரப்பன் வேட்டையில் ஈடுப்பட்டது போன்றவற்றை அவருடன் இராட்டினத்தில் பயணித்து அனுபவியுங்கள்.''

''ஓய்வுபெற்று இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் எவ்வாறு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரிந்து தனது தனித்தன்மையை பதிவு செய்துள்ளார் இப்புத்தக்கத்தின் வழியாக.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+