மூணாறிலிருந்து மெரினா வரை! ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவாரம் பற்றி ஞாபகம் இருக்கிறதா?
சென்னை: ஒரு காலத்தில் தமிழக காவல்துறையில் கம்பீர அதிகாரியாக வலம் வந்து, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வால்டர் தேவாரத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் இணக்கமாக பணியாற்றிய வால்டர் தேவாரம், சூட்டிங்கில் எக்ஸ்பர்ட் ஆக திகழ்ந்தவர். வீரப்பன் கூட்டாளிகள் 150 பேர் இருந்த நிலையில் 6 மாதத்தில் அதனை கால் வாசியாக குறைத்தவர். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது காவல்துறை பணிக்கு வந்தவர் படிப்படியாக உயர்ந்து தமிழக காவல்துறை தலைவர் பதவி வரை உயரம் தொட்டவர்.

அதுமட்டுமல்ல தமிழக காவல்துறையில் பெண் காவலர்களை ஏன் நியமிக்க வேண்டும் என வால்டர் தேவாரம் 4 காரணங்களுடன் கூடிய அறிக்கை ஒன்றையும் அரசிடம் சமர்பித்தார். இன்று தமிழக காவல்துறையில் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள் என்றால் அதில் வால்டர் தேவாரத்தின் பங்களிப்பும் உள்ளது.
ஓய்வு பெற்று 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் 80 வயதை கடந்தும் இன்னும் திடகாத்திரமாக காணப்படுகிறார். இந்நிலையில் மூணாறிலிருந்து மெரினா வரை என்ற தலைப்பில் தனது சுயசரிதை மற்றும் கடந்து வந்த பாதை, நினைவலைகள் பற்றி வால்டர் தேவாரம் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறும் நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அந்த புத்தகத்தின் பிரதியை வழங்கி படித்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மூணாறிலிருந்து மெரினா வரை என்ற புத்தகத்தின் சுருக்கம் பற்றிய விவரம் வருமாறு;
''மூணாறிலிருந்து மெரினா வரை என்ற இப்புத்தகத்தில் வால்டர் ஐ. தேவாரம் அவர்களின் வாழ்க்கைப் பயணம் மூணார் தேயிலைத் தோட்டத்தில் தொடங்கிய சிறுவயது நினைவுகளையும், கல்லுரிப் படிப்பை சென்னையில் தொடர்ந்தது பற்றியும் இராணுவத்தில் சேர ஆர்வம் கொண்டு, வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்று இம்பால் நகரில் சிறிதுகாலம் கல்லுரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து விட்டுப் பின்னர் அவரது இரண்டாவது தெரிவான இந்தியக் காவல் பணியில் சேர்ந்தது பற்றியும் அதன் பின்னர் கடந்த கால சம்பவங்களைப் பற்றியும் சுவராசியமாக எழுதியுள்ளார் அதை வாசகர்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம்.''
''அவருடன் சேருங்கள் தமிழ்நாட்டுக் காவல் பணியில் பல ஆண்டுகள் வன்முறைக்கும்பல்களை அடக்கியதும், நக்சல் தீவிரவாதிகளை ஒழித்தது, வீரப்பன் வேட்டையில் ஈடுப்பட்டது போன்றவற்றை அவருடன் இராட்டினத்தில் பயணித்து அனுபவியுங்கள்.''
''ஓய்வுபெற்று இருபத்தி ஆறு ஆண்டுகள் கழித்து தன்னுடைய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் எவ்வாறு உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரிந்து தனது தனித்தன்மையை பதிவு செய்துள்ளார் இப்புத்தக்கத்தின் வழியாக.''
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications