இனிமே எந்த ரயிலும் இங்கே நிற்காது.. நிரந்தரமாக மூடப்படுகிறது "வாங்கல்" ஸ்டேஷன்: அதிரும் கரூர், சேலம்
சென்னை: கரூர்-சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது பயணிகளிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்திய ரயில்வே துறை சார்பில், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் தொடர்பான நடவடிக்கைகளையும், அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.. அதேபோல, பயணிகளின் வசதிக்காக, ரயில்கள் நின்றுசெல்லும் வகையில், ஆங்காங்கே புதிய ரயில் நிலையங்களையும் அமைத்து வருகின்றன..

ரயில் நிலையங்கள்: எனினும், சில சமயங்களில், இதுபோன்ற ரயில் நிலையங்களுக்கு பயணிகளிடம் போதுமான வரவேற்பு கிடைப்பதில்லை.. அதனால், அந்த ரயில் நிலையங்களின் பயன்பாடுகள் வெகுவாக குறைந்துவிடவும், சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களை மூடும் நடவடிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான், வாங்கல் ரயில்வே ஸ்டேஷன்.
கரூர்-சேலம் வழித்தடத்தில் இந்த வாங்கல் ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்- நாமக்கல் - கரூர் இடையே புதிய அகல ரயில்பாதை அமைக்கப்பட்டபோது மோகனூருக்கும், கரூருக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் கடந்த 201ல், அமைக்கப்பட்டது.
வரவேற்பு இல்லை: இந்த ரயில் நிலையத்துக்கு பயணிகள் வந்து, பயணம் மேற்கொள்ளும் வகையில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் நின்றும், சென்றும் செயல்பட்டு வந்தது. ஆனால், அந்த பகுதி மக்களிடையே வாங்கல் ஸ்டேஷன் பயன்பாடு பெரிய அளவில் காணப்படவில்லை.. சில நாட்கள் மட்டும் ஒருசில பயணிகள் ஸ்டேஷனுக்கு வந்து போனார்கள்.. ரயிலில் ஏறி பயணித்தும் வந்தனர்.. அதனால்தான், வாங்கல் ரயில்வே ஸ்டேஷனை மூடுவது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வந்தது.
பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால், இன்று முதல் இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தற்போது அறிவித்திருக்கிறது.. சேலம் ரயில்வே கோட்டம் ரயில்வே துறை சார்பில் இது தொடர்பாக செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
விளக்கம் : அதில், "வாங்கல் ரயில் நிலையத்தில் இனி எந்த ரயில்களும் நிற்காது. இன்று மட்டுமே கடைசியாக ரயில்கள் இந்த வழித்தடத்தில் நின்று செல்லும். பயணிகளுக்கு வாங்கல் ரயில் நிலையத்திலிருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்படாது. பிற ரயில் நிலையங்களில் இருந்து வாங்கல் ரயில் நிலையத்துக்கும் பயணச்சீட்டு வழங்கப்படாது" என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications