கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு?
சென்னை: வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிகத்துக்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் புகார் அளிக்கலாம்; வீட்டு சிலிண்டரை வணிக ரீதியில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்; பொதுமக்கள் 044 28592828 என்ற எண்ணிலும், 1967 என்ற உதவி எண்ணிலும் புகாரளிக்கலாம் என தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளுக்கு வணிக சிலிண்டர் விநியோகம் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வீட்டு உபயோக சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தால், பொதுமக்கள் வீட்டு உபயோக சிலிண்டர் கேட்டு, கேஸ் ஏஜென்சி நிறுவனங்களிடம் முன்பதிவு செய்வது அதிகரித்துள்ளது.
மேலும், சிறிய ஹோட்டல்கள், டீக்கடைகள் நடத்துபவர்கள், வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. வணிக சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டு உபயோக சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக ரீதியிலான தேவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீட்டு பயன்பாட்டு சிலிண்டரை வணிக ரீதியாக பயன்படுத்தினால் புகார் அளிக்கலாம்; வீட்டு சிலிண்டரை வணிக ரீதியில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்; பொதுமக்கள் 044 28592828 என்ற எண்ணிலும், 1967 என்ற உதவி எண்ணிலும் புகாரளிக்கலாம் என தமிழ்நாடு அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications