"வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் லெஜண்ட் ஆவார்" - தந்தையின் உறுதியான நம்பிக்கை பலிக்குமா?
சென்னை: ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய தனது மகன் வாஷிங்டன் சுந்தர் கண்டிப்பாக ஒரு லெஜண்ட் வீரராக உருவெடுப்பார் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்கு கிளைமேக்ஸ் ஹீரோவாக ஜொலித்தவர் வாஷிங்டன் சுந்தர். Gabba-வில் நடந்த இறுதி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வாஷி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தன்னை நிரூபித்தார்.
Recommended Video

பந்துவீச்சில், லெந்த்தில் பல வேரியேஷன்கள் காட்டிய வாஷி, குட் லெந்த்தில் சில பல விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். ஆனால், அவரது பேட்டிங் தான் எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

முதல் இன்னிங்ஸில், அணி இக்கட்டான நிலையில் இருந்த போது நங்கூரமாய் நின்று 62 ரன்கள் எடுத்ததும், இரண்டாம் இன்னிங்ஸில் அதிரடியாக 29 பந்துகளில் 22 ரன்கள் எடுத்ததும் இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது.
இந்நிலையில், வாஷிங்டன் குறித்து அவரது தந்தை சுந்தர் என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், "எனது மகன் குறித்து நான் பெருமைப்படுகிறேன். அதுமட்டுமின்றி, ரவிச்சந்திரன் அஷ்வின், நடராஜனும் நம்மை பெருமைப்பட வைத்துள்ளனர்.
பொதுவாகவே, வாஷி ஒரு தொடக்க பேட்ஸ்மேன். இப்போது தான் தனது பேட்டிங் வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
அவரது இந்த செயல்பாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர் நிச்சயம் ஒரு லெஜண்டாக உருவெடுப்பார். அவரிடம் அந்தளவு உயர்வதற்கான ஆற்றல், கடின உழைப்பு, ஒழுக்கம் இருக்கிறது. இந்திய அணியில் அவர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட கடவுள் அவருக்கு துணையிருப்பார் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாஷிங்டன் சுந்தரின் சகோதரி ஷைலஜா சுந்தர் பேசுகையில், "நாங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே அனுபவித்து கிரிக்கெட் விளையாடி வருகிறோம். வாஷிங்டனின் பவுலிங்கை விட அவரது பேட்டிங்கை நான் மிகவும் ரசிப்பேன். ஒரு கிரிக்கெட் போட்டியில் அவரது இரண்டு விதமான பேட்டிங் ஸ்டைலை நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்றார்.
வாஷிங்டனின் தாயார் பேசும் போது, "தினம் அதிகாலை 5 மணிக்கு எழுந்து கிரவுண்டுக்கு சென்று பயிற்சியை முடித்து பிறகு பள்ளிக்குச் செல்வார். மாலை மீண்டும் கடுமையான பயிற்சி மேற்கொண்ட பிறகு தான், தனது பள்ளிப் பாடங்களை முடிப்பார்.
மழை பெய்தாலும் அவருக்கு கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட வேண்டும். கூட விளையாட அவரது அப்பாவையும், நண்பர்களையும் அழைத்துச் செல்வார். ஒருவேளை அவரை விளையாட அனுமதிக்கவில்லை எனில், வீடே களேபரமாகிவிடும்" என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications