ஓசி பயண சர்ச்சைகளுக்கு குட்டு.. மகளிருக்கான இலவச பஸ் பயணத் திட்டம் எங்கள் கடமை.. முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: அரசுப் பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை கடமையாக நினைத்து செயல்படுத்துகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் போன் விற்பனையாளரான பெகட்ரான் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை செங்கல்பட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனை மகேந்திரா வேல்ர்டு சிட்டியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், உலக புகழ்பெற்ற பெகட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொடங்குவது பெருமை அளிக்கிறது. தைவான் நிறுவனம் மேலும் பல தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும்.

14 ஆயிரம் பேருக்கு வேலை
இந்த புதிய நிறுவனத்தால் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் அந்த வட்டாரம், மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. பெண் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பெகட்ரான் நிறுவனம் கூறியுள்ளது. பெண்களை அதிகளவில் பணியமர்த்தினால் தமிழக அரசு பல மானியங்களை வழங்க பரிசீலித்து வருகிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பயணத் திட்டத்தை கடமையாக நினைத்து செயல்படுத்துகிறோம். .

18 மாதங்களில் உற்பத்தி
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகட்ரான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கவுள்ளது. இது தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நிலம் ஒதுக்கீடு, வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் அனுமதி, ஊக்கத்தொகுப்பு சலுகை ஆகியவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு முயற்சி
அகில இந்திய அளவில் வணிகம் செய்வதில் எளிதான மாநிலம் என்ற பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல் உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

மின்னணுவியல் துறை
மின்னணுவியல் துறையில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாம்சங், டெல், சால்காம், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி திட்டங்களை அமைத்ததுடன், விரிவாக்க திட்டங்களையும் இங்கு செயல்படுத்தி வருகின்றனர். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வேண்டும் என்பதே இலக்கு.

புதிய ஒப்பந்தம்
2030ம் ஆண்டுக்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்பதே லட்சிய இலக்கு. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் பலனாக, அண்மையில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி திட்டத்தை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியதை ஓசி பயணம் என்ற வார்த்தையால் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து அதிமுக ஐடி விங்க் நிர்வாகி ஒருவர் மூதாட்டியை பேருந்தில் அழைத்துச் சென்று, எங்களுக்கு ஓசி பஸ் பயணம் வேண்டாம் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்தார். அது வைரலாக சுற்றியது. இந்த நிலையில்தான், இது ஓசி இல்லை, கடமை என்ற தொனியில் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications