ஸ்டாப்.. நாடகம் எங்களுக்கு தெரியும்.. அண்ணாமலையோட நீண்ட கால ஆசை இதுதான்.. விளாசும் காயத்ரி ரகுராம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கடுமையாக சாடி விமர்சித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முழு வீச்சில் அண்ணாமலை பாஜகவை தயார் படுத்தி வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் குறிப்பிட்ட இடங்களை கைப்பற்றும் முனைப்பில் பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளவும் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

அதன்படி வரும் 28ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாதயாத்திரையை அண்ணாமலை தொடங்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாக கூறப்படும் ராமநாதபுரத்தில் இருந்து அண்ணாமலை இந்த பாதயாத்திரையை தொடங்க இருக்கிறார். இதனிடையே அண்ணாமலை ராஜ்யசபா எம்.பியாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் இன்று செய்தி பரவியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம் 'அண்ணாமலைக்கு ஆசை ஒரு பக்கம், பீதி ஒரு பக்கம், விளம்பரம் ஒரு பக்கம்' என்று கடுமையாக சாடியுள்ளார். காயதிரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
அவர் ராஜ்யசபா எம்.பி., மத்திய அமைச்சர் வரப் போகிறார் என்று அவரது வார்ரூம் ஒரு பொய்யான செய்தியை பரப்பியது (அவரது நீண்ட கால ஆசை), அவர் பாஜகவில் சேர்ந்ததற்கு முழு காரணம் இது மட்டுமே, எந்த வேலையும் செய்யாமல், சேவையும் செய்யாமல் (அவர் எப்படி தனது போலீஸ் வேலை: தேச பக்தி சேவையை முடிக்காமல் பாதி வழியில் விட்டுவிட்டார் என்பது போல) மக்கள் சேவை பிம்பம் மட்டுமே. வாயில் வடை.
* அதன் பிறகு அதே வார்ரூம் அது பொய்யான செய்தி என்று ஒரு செய்தியை பரப்பியது. ஏனென்றால் அண்ணாமலைக்கு டெல்லி அரசியல் மத்தியில் அவர் தொல்லை இருக்கும் என்று பாஜகவுக்கு தெரியும், அவரால் தமிழக எம்பி சீட் வெல்ல முடியாது என்பது தெரியும் (இது பீதி) .
* இப்போது அவர் இல்லாமல் தமிழக பாஜக மூழ்கிவிடும். தமிழக பாஜகவுக்கு அவர் தேவை என்கிறார்கள் (வெட்டி விளம்பரம்). பின்னர் அவர் பாவ யாத்திரை செய்வார் (அது விளம்பரத்திற்கான அவரது சேவை)" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications