சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

40 தொகுதிகளும் எங்களுக்குதான்.. சாராயம் கொண்டு வந்தது திமுகதான்.. சொல்வது அமைச்சர் ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை:நாற்பதும் நமது, நாடும் நமது என்கிற அடிப்படையில் தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெறும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

We will in all 40 loksabhsa constituencies in tamilnadu and puducherry, says minister jayakumar

அப்போது கூறியதாவது: சட்டசபை, லோக்சபா மற்றும் இடைத்தேர்தல்களில் அஇஅதிமுக வெற்றி பெறும். தமிழகத்தில் மதுவை கொண்டு வந்ததே திமுக தான். ஒரே நாளில் முழு மதுவிலக்கை கொண்டு வர முடியாது.

மதுவினால் ஏற்படும் தீங்குகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து பிரச்சாரங்கள் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அஇஅதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகிறார்கள்.

ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அதை புரிந்து கொள்ளவில்லை. எப்படியாவது, குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அவரது எண்ணம் ஈடேறாது.

விபத்தில் இறந்து போன ஓட்டுநர் கனகராஜ் நேரில் வந்து சாட்சி சொல்ல முடியாது. ஆனால், இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று கூறினார்.

English summary
DMK President M.K.Stalin wants AIADMK government should be dissolved, but their party mlas wants this government to run, says Minister Jayakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X