மாறுது வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா.. அடடே சென்னை
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியிருந்த நிலையில், இன்று முதல் இந்த வெப்ப அலை முடிவுக்கு வரும் என வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வழக்கம்போல வெயிலும் வாட்டியது. அன்றாடம், பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி கடந்த 26ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. சென்னையை பொறுத்த அளவில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வந்தது, உடன் அனல் காற்றும் வீசியது. இந்த வெயில் தாக்கம் காரணமாக எனவே நேற்று திறக்கப்பட இருந்த பள்ளிகள் 14ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு வெப்பம்+அனல் காற்று இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது இரண்டு நாட்கள் முடிவடைந்ததால் இன்று முதல் சென்னையில் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளார். இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், "ஜூன் 9ம் தேதியான இன்று முதல் சென்னையில் அதீத வெப்பம் குறையும். சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெப்பம் குறையும்.
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நகர் பகுதியை பொறுத்த அளவில் ஜூன் 10ம் தேதியான நாளை மழை பெய்யும்" என கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications