தமிழகத்தில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் - 4 நாட்களுக்கு வறண்ட வானிலை
தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு பனிமூட்டம் நிலவும் காணப்படும் எனவும் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் சற்றே ஓய்வு எடுக்கத் தொடங்கியுள்ளது. அதிகாலையில் பனிமூட்டமும் பகல் நேரங்களில் சுள்ளென்று வெயிலடித்தாலும் குளிர்ச்சியான காலநிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பனிமூட்டமும் 4 நாட்களுக்கு வறண்ட நிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த நவம்பர் மாதத்தில் கொட்டித் தீர்த்தது. அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இருந்தே மழை படிப்படியாக குறைய ஆரம்பித்து விட்டது.
அதிகாலையில் எங்கும் பனிமூட்டமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்தாலும் குளிர்ச்சியான காலநிலையே நிலவுகிறது. கொடைக்கானலில் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனி தாக்கத்தால் கொடைக்கானல் பூங்காவில் மலர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை வானிலை மையம்
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 26.12.2021 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.

வறண்ட வானிலை
வரும் 27ஆம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

உள் மாவட்டங்களில் பனிமூட்டம்
இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

அதிகாலை பனிமூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications