அண்ணாநகரில் குத்த வச்ச கல்லான மேக கூட்டம்.. குறைந்த நேரத்தில் 100 மி.மீ. மழை.. வெதர்மேன் ஹேப்பி
சென்னை: சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்கிற போதிலும், ஏதோ இயற்கை நம் மீது கரிசனம் காட்டி சென்னைக்கு மழையை தருகிறது. அதன் காரணமாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனம்பாக்கத்தில் வெளுத்தது மழை. குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
உங்களாலே ரொம்பவே பெருமையா இருக்கு... நாங்கள் உங்களை ரொம்பவே விரும்பறோம்.. பிரியங்கா

பாடி
அது போல் நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத நிலையில் நள்ளிரவு நேரத்தில் சென்னையில் கனமழை பெய்தது. பலத்த காற்று இருந்தது. ஆனால் இடி, மின்னல் இல்லாமல் இந்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ச்சி அடைந்தது. அண்ணாநகர், முகப்பேர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

பாடி, அண்ணாநகர்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், அண்ணா நகர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் 100 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இந்த பகுதிகளில் மேகக் கூட்டங்கள் குத்த வச்ச கல்லு போல் நகராமல் இருந்தன.

சரிசமம்
இதனால் அதிக அடர்த்தி கொண்ட மழையை கொடுத்தது. கடந்த வாரம் தென் சென்னையில் எங்கெல்லாம் மழை பெய்ததோ அங்கெல்லாம் இந்த முறை பெய்யவில்லை. இந்த இயற்கையான மழை சரிசமமாக பெய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. நுங்கம்பாக்கத்தில் மீண்டும் மழை பெய்யவில்லை.
Recommended Video

வடக்கு பகுதி
கடந்த முறையும் நுங்கம்பாக்கத்தில் மழை பெய்யாமல் சபிக்கப்பட்ட பகுதியாக இருந்த நிலையில் இந்த முறையும் மழையை தவறவிட்டுள்ளது. இது சஹாரா பாலைவனம் ஆனதுதான் காரணம். ஆனால் நுங்கம்பாக்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை பெய்யும். இந்த மழை எதிர்பாராத ஒன்று. இடி மின்னல் இல்லாமல் சும்மா பெய்து தீர்த்தது. சென்னையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications