நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை படிப்படியாக குறையும்.. வெதர்மேன்
சென்னை: நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் புறநகர் பகுதியில் உள்ள 52 ஏரிகள் நிரம்பியுள்ளன. சென்னை தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியும் நிரம்பும் நிலையில் இருப்பதால் அது திறந்துவிட்டால் 2015 வெள்ளம் போல் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகத்துடன் மக்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், இந்த செயற்கைகோள் படத்தில் காட்டியுள்ளது போல் மஞ்சள் நிற புள்ளியானது சென்னைக்கு வெளிப்புறத்திலிருந்து நகரை நோக்கி நகர்கிறது.
இதனால் மழையின் அளவு நகரின் முக்கிய இடங்களில் தீவிரமாக இருக்கும். நாளை முதல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.
செம்பரம்பாக்கம் ஏரி குறித்து அச்சமடைந்திருப்போர், ஊடகங்கள் கூறுவதை தவிர்த்துவிட்டு நிம்மதியாக இருங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications