'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும் பணியின்போது மண் சரிந்து விபத்துக்குள்ளானதில், மண்ணுக்கு அடியில் சிக்கிய மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை யானைகவுனி பகுதிக்குட்பட்ட வணிகவரித் துறை அலுவலகம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

West Bengal worker trapped and dead while digging water drainage canal in Chennai

அங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் கால்வாய்க்குள் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மண் சரிந்து விழுந்தது.

மண் சரிவில் சிக்கிய ரஞ்சித் குமார் மயக்கமடைந்தார். இதனையடுத்து உடன் பணியாற்றியவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு ரஞ்சித்தை மீட்டனர்.

மயங்கிய நிலையில் இருந்த ரஞ்சித்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஞ்சித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் செந்தூர் முருகன் என்பவரிடம் யானைக்கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+