குரூப் 4 ரிசல்ட் கேட்டு டிஎன்பிஎஸ்சியை தெறிக்கவிடும் தேர்வர்கள்.. ட்விட்டரில் டாப் ட்ரெண்ட்டிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சம் பேர் பங்கேற்றனர். 7 மாதங்கள் கடந்தும் கூட தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி மீது கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று டிஎன்பிஎஸ்பி குரூப் 4 தேர்வு ரிசல்ட்டை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி ட்விட்டரில் WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் டாப் டிரெண்ட் ஆனது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழ்நாடு முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி செயல்பாடு என்பது சமீபகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டிஎன்பிஎஸ்சி மீது தொடரும் குற்றச்சாட்டு

டிஎன்பிஎஸ்சி மீது தொடரும் குற்றச்சாட்டு

சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு வினாத்தாளில் பதிவெண்களால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் பல மையங்களில் தேர்வுகள் தாமதமாக துவங்கின. இதனால் சில தேர்வர்கள் வினாத்தாளில் இருந்த கேள்விகளை பார்த்தபிறகு அதற்கான விடைகளை அறிந்து தேர்வு எழுதியதாக புகார்கள் எழுந்தன. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறியும் டிஎன்பிஎஸ்சி அமைதி காத்து வருகிறது.

வெளியிடப்படாத குரூப் 4 ரிசல்ட்

வெளியிடப்படாத குரூப் 4 ரிசல்ட்

இது ஒருபுறம் இருக்க டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 4 தேர்வுகள் நடந்தது. ஜூலை மாதம் 24ம் தேதி தேர்வர்கள் தேர்வு எழுதினர். மார் 18 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கூறியபடி ரிசல்ட் வெளியாகவில்லை. தற்போது 7 மாதங்கள் கடந்தும் இன்னும் குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடாமல் உள்ளது.

ட்விட்டரில் டிரெண்ட்

ட்விட்டரில் டிரெண்ட்

இந்த விஷயத்தில் டிஎன்பிஎஸ்சி மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இன்று ட்விட்டரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை கேட்டு ட்விட்டரில் இன்று தேர்வர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ஹேஷ்டேக் என்ன?

ஹேஷ்டேக் என்ன?

அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என தேர்வர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளை அவர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் வெளியிடுகின்றனர். இதனால் #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சியை விமர்சித்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் நிலையை எடுத்து கூறும் வகையிலும் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக்கில் மொத்தம் 93 ஆயிரம் ட்விட்கள் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளதால் ட்விட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+