ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!
சென்னை: அதிமுக பொதுக் குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் சில நடைமுறை குழப்பங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக உள்ளது.
இந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயசந்திரன் கூறுகையில் ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக் குழு செல்லாது. ஜூன் 23 ஆம் தேதி முன்பு என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்க வேண்டும். பொதுக் குழுவை ஆண்டுக்கு ஒரு முறைதான் கூட்ட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும். 5 இல் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டால் பொதுக் குழுவை இருவரும் கூட்ட வேண்டும். ஒரு வேளை இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடி ஆணையரை நியமிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

குழப்பங்கள்
இந்த தீர்ப்பில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதை கோர்ட் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 1. ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றால் எந்த நிலை என்ற கேள்வி வருகிறது. அதாவது ஜூன் 14 ஆம் தேதி முதலே ஒற்றை தலைமை விவகாரம் ஓங்கியது. ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி இடையே பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது.

என்ன குழப்பம்
2. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக் குழுவை கூட்டலாம் என்றால், எடப்பாடி தரப்பு சமாதானமாக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 3. பொதுக் குழுவை ஆண்டுக்கு ஒரு முறைதான் கூட்ட வேண்டும் என கோர்ட் நிர்பந்திக்க முடியாது. அதிமுக உள்கட்சியில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பொதுக் குழுவை கூட்டிதானே ஆக வேண்டும்.

அலுவலக சாவி
4. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து தீர்ப்பில் எதுவும் சொல்லவில்லை. எனினும் இந்த வழக்கு தொடர்பாக நாளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. 5. அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை வங்கிகள் எடப்பாடி தரப்புக்கு கொடுத்தது என்னவாகும்?
Recommended Video

குடைச்சல்
6. 5 இல் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் யாராவது ஒருவர் உடன்படாவிட்டால் மற்றொருவர் நீதிமன்றத்தை நாடலாம் என்றால் இந்த விவகாரத்தில் ஒருவருக்கொருவர் குடைச்சல் கொடுக்க அவ்வப்போது நீதிமன்றத்தை நாட வாய்ப்பிருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications