என்ன கொடுமை இது? தியேட்டருக்கு வெளியே "கூல் சுரேஷ்" செய்த சம்பவம்..தமிழக அரசுக்கு பறந்த பரபர மெசேஜ்!
சென்னை: சென்னையில் வெந்து தணிந்தது காடு படம் பார்த்த பின் கூல் சுரேஷ் தமிழ்நாடு அரசிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியது.
மத்தவங்க படம் வாந்தாலே.. ஆட்டம் போடும் குணம் கொண்டவர் கூல் சுரேஷ். தான் கடவுளாக நினைக்கும் சிம்புவின் படம் வந்தால் சும்மாவா இருப்பார்! காலை 4 மணி காட்சிக்கு 3 மணிக்கெல்லாம் வந்து ரகளையை ஆரம்பித்துவிட்டார் கூல் சுரேஷ்.
இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படம் இன்று வெளியாகி உள்ளது. காலையில் இருந்து படத்திற்கு பெரிய அளவில் பாசிட்டிவ் ரிவ்யூக்கள் வந்தபடி உள்ளன.

கூல் சுரேஷ்
சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் பொதுவாகவே போகிற இடங்களில் எல்லாம் வெந்து தணிந்தது காடு.. சிம்புவிற்கு வணக்கத்தை போடு என்று கூறுவதுதான் வழக்கம். இந்த நிலையில் இன்று படம் வருகிறது என்று தெரிந்ததும் அதிகாலை 3 மணிக்கே தியேட்டர் வாசலில் இவர் காத்து இருந்தார். தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ் எப்போதும் போல இன்றும் தியேட்டர் வாசலில் ரகளை செய்துவிட்டு, சிம்புவை பற்றி புகழ்ந்து கத்திவிட்டு உள்ளே செல்ல முயன்றார்.

கார் கண்ணாடி
அங்கே நிலவிய கூட்டத்தில் அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்த யாரோ தள்ளிவிட பலர் கார் மீது விழுந்ததில் கண்ணாடி உடைந்தது . அப்போது கூல் சுரேஷ் கார் உள்ளேதான் இருந்தார். கார் கண்ணாடி உடைந்த டென்ஷனில் யார் பார்த்த வேலைப்பா இது.. சிம்பு ரசிகர்களா இப்படி செய்வது.. எனக்கு தர்மசங்கடமாக இருக்கிறது என்று வருத்தத்துடன் கேட்டார். அதன்பின் சினிமா பார்க்க சென்றார்.

அபிஷேகம்
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கூல் சுரேஷ்.. அங்கேயே தலையில் தண்ணீர் ஊற்றி வினோதமாக கொண்டாடினார். இவர் செய்ததை பார்த்து அங்கு இருந்த சிம்பு ரசிகர்கள்.. என்னங்க கொடுமை இது.. என்ன இவர் இப்படி செய்கிறார் என்று விசித்திரமாக பார்த்தனர். ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து அதை தலையில் மாறி மாறி ஊற்றி கூல் சுரேஷ் கொண்டாடினார். கேமரா முன்பு நின்று கூல் சுரேஷ் இப்படி செய்தது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

தமிழக அரசு
தனக்கு தானே அபிஷேகம் செய்து கொண்ட கூல் சுரேஷ்... பின்னர் தமிழ்நாடு அரசுக்கு ஒரு மெசேஜும் அனுப்பினார். நான் இந்த படத்திற்காக அரசிடம் லீவ் கேட்டு இருந்தேன். பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ் கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன். அதை பலர் விமர்சனம் செய்து இருந்தனர். நான் என் கருத்துக்கு வருத்தம், மன்னிப்பு கேட்கிறேன். நான் சிம்பு மேல் இருக்கும் பாசத்தில் சொன்னேன். மற்றபடி யாரையும் கெடுத்து குட்டி சுவராக்க வேண்டும் என்று இப்படி செய்யவில்லை, என்று கூல் சுரேஷ் தெரிவித்தார்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications