நாம் எப்போ மாற போறோம்? என் உணர்ச்சிகள் கொதிக்கின்றன.. "ஜெய் பீம்" பார்த்துவிட்டு கலங்கிய குமாரசாமி
சென்னை: ஜெய் பீம் படம் காரணமாக தன்னுடைய உணர்ச்சிகள் கொதிப்பு அடைந்ததாகவும், இந்த படம் பல உண்மைகளை தோலுரித்து காட்டியதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பார்த்து ரிவ்யூ கொடுத்துள்ளார்.
இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படம் அமேசான் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. கடந்த வருடத்தில் தமிழின் மிக முக்கியமான படமாக ஜெய் பீம் உருவெடுத்தது.
பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜாக்கண்ணுவிற்கு என்ன நடக்கிறது.. என்ற ஒற்றை புள்ளிதான் படத்தின் கதை. இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், போலீஸ் டார்ச்சர், சட்ட போராட்டம், உரிமைக்கான குரல் என்று பல விஷயங்களை ஜெய் பீம் அதிரடியாக பேசுகிறது.

குமாரசாமி
இந்த நிலையில்தான் ஜெய் பீம் படத்தை கர்நாடக முன்னாள் முதல்வர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பார்த்து ரிவ்யூ கொடுத்துள்ளார். அதில், நான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதால் கடந்த வாரம் வீட்டில் இருந்தேன். அப்போது வீட்டில் புத்தகங்களை படித்துக்கொண்டும், படங்களை பார்த்துக்கொண்டும் இருந்தேன். நான் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று ஜெய் பீம், இன்னொன்று ஜனகன மன. இரண்டு படங்களில் மிகவும் உணர்ச்சிகரமான விஷயங்களை பற்றி பேசி என் இதயத்தை தொட்டது. என் உணர்ச்சிகளை தூண்டியது.

ஜெய் பீம்
விசாரணை கைதிகளின் நிலை பற்றிய கசப்பான உண்மைகளை சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பகிர்ந்தார். ஜெய் பீம் படம் அதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. நானும் அதை பற்றித்தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இந்திய நீதித்துறை தலித் மக்களுக்கும், ஏழைகளுக்கும் தூரத்தில் இருக்கிறதா? குற்றஞ்சாட்டப்பட்ட பணக்காரருக்கு நொடியில் பெயில் கிடைக்கிறது.

தலைமை நீதிபதி ரமணா
ஆனால் ஏழை மட்டும் சிறை கம்பிகளுக்கு பின் இருக்க வேண்டுமா? ஜெய் பீம் படம் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் கொடூரத்தை பற்றி பேசி உள்ளது. தலைமை நீதிபதியும் இதைத்தான் சொன்னார். ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விசாரணை இன்றி சிறையில் அடைப்பது கேள்விக்குரியது. 6.10 லட்சம் சிறை கைதிகளில் 80 சதவிகிதம் பேர் விசாரணை கைதிகள். விசாரணை முடியாமல், அவர்கள் நடை பிணங்களாக சிறைக்கு பின் உள்ளனர்.

பழங்குடி
2017ல் 121 பழங்குடி மக்கள் சிஆர்பிஎப் வாகனம் மீது தாக்குதல் என்று சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். 5 வருடம் இவர்கள் சிறையில் இருந்தனர். இப்போது என்ஐஏ இவர்கள் குற்றவாளி இல்லை என்று கூறி உள்ளது. இவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு யார் பதில் சொல்வது? இவர்களுக்கு கொடுக்கப்பட உள்ள இழப்பீடு என்ன? ஜெய் பீம் இது போன்ற சம்பவங்கள் மீது வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

சார்ஜ் சீட்
தவறான சார்ஜ் சீட், தவறான கைதுகள், பெயில் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை அந்த படம் பேசி உள்ளது. தலைமை நீதிபதியும் இதை பற்றித்தான் பேசி உள்ளார். அவரின் பேச்சை மொத்த நாடு கேட்டது. அப்படி என்றால் எப்போது நாம் மாற போகிறோம். எப்போது நாம் மாற்றங்களை கொண்டு வருவோம். இதற்கான முயற்சிகளை நான் செய்வேன்.

பெயில் சிக்கல்
நம்முடைய அரசியலமைப்பு சட்டம் மிக சிறப்பான சட்டங்களை வழங்கி உள்ளது. பணக்காரர் முதல் ஏழை வரை எல்லோருக்கும் பிரச்சனை வரும் போதெல்லாம் அவர்கள் கோர்ட்டைதான் நம்பி இருக்கிறார்கள். ஜெய் பீம் படம் தமிழ்நாட்டில் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஜனகன மன படம் இன்றைய அரசியல் நிலையை தோலுரித்து காட்டுகிறது.
Recommended Video

பாசாங்குத்தனம்
இன்றைய அரசியலில் உள்ள பாசாங்குத்தனம், தந்திரம் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை பற்றி இந்த படம் பேசுகிறது. அரசியல் வாதிகளில் கைகளில் சிஸ்டம் எப்படி சிக்கி தவிக்கிறது என்பதை இதை காட்டுகிறது. இந்த சிஸ்டத்தை கண்ணாடி போல பிம்பமாக காட்டி இருக்கிறது சினிமா. இரண்டு படங்களின் இயக்குனர்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்கள், என்று குமாரசாமி தனது ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications