மாதவிடாய் இருப்பதாக கூறியும்.. விடாத கும்பல்.. அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்.. போலீஸ் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை போலீசார் அளித்த விளக்கத்தில், அண்ணா பல்கலையில், 2ம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் பெண் மாணவி பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். 24.12.2024 அன்று அவர் எழுத்துப்பூர்வ புகாரை அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

anna university

23.12.2024 அன்று இரவு 7.45 மணிக்கு தன் காதலனுடன் இருந்தபோது, ​​அண்ணா பல்கலைக்கழக நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம், இரண்டு ஆண்கள் தன் காதலனையும் தன்னையும் திடீரெனத் தாக்கியதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

இதனால் பயந்து போன காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த 2 பேர் அந்த மாணவியை தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியபோதும், ​​அவருடன் "வேறு வழியாக" உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புக் குழுவால் அவரது குறைகள் விசாரிக்கப்பட்ட நிலையில்.. போலீஸ் வழக்கும் பதியப்பட்டு உள்ளது..

இதனால், மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் http://Cr.No.3/2024 u/s 63(a), 64(i), 75(I)(ii)(iii) என்ற முகவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேக நபர் ஒருவரும் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மோசமான நிலை: தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; திமுக ஆட்சியில் பெண்கள் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு எனது கடும் கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

வழக்கு பதிவு: கோட்டூர்புரம் ஜே4 போலீசில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமையான் தண்டனை) கீழ் டிசம்பர் 24 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) பாரதிராஜன் மற்றும் அவரது குழுவினர் விசாரித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் குழு வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது.

இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமாக அந்த 2 பேர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+