Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 பேருக்கும் அடிதடி! "இதுக்குத்தான்" அமைதியா இருக்கோம்! உடைத்த உதயநிதி! அப்போ எடப்பாடி டீம் சொன்னது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இதை பற்றி முதல்முறை மௌனம் கலைத்து இருக்கிறார்.

சென்னையில் உள்ள பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நேற்று தயாளு அம்மாள் தொண்டு நிறுவனம் சார்பாக உடன் பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்.. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பலருக்கு லேப்டாப், கல்வி உதவித்ததோகை வழங்கப்பட்டன. அதேபோல் சிலருக்கு இலவச ஆட்டோவும் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினர்.

அமைச்சர் சேகர் பாபுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இந்த நிகழ்வில் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை உதயநிதி ஸ்டாலின் வைத்தார். முக்கியமாக அதிமுக பற்றிய விமர்சனங்களையும் உதயநிதி ஸ்டாலின் வைத்தார். அதில், இன்று திமுக ஆட்சியில் இருக்கிறது. ஆட்சி அமைத்து 1 வருடம் 3 மாதம் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தலைவர் கட்சியில் தீவிரமாக பணிகளை வருகிறார்.

வாக்குறுதிகள்

வாக்குறுதிகள்

50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆட்சி நிலையாக சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பக்கம் அதிமுக எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதிமுக ஒன்றாக இருக்கிறதா? இரண்டாக இருக்கிறதா? மூன்றாக இருக்கிறதா? என்று தெரியவில்லை. அவர்கள் உண்மையில் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை.

மோசமான நிலை

மோசமான நிலை

அந்த அளவிற்கு மோசமான நிலை உள்ளது. ஒரு பக்கம் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. பொதுக்குழுவை நடத்துவேன் என்று கூறுகிறார். நான் சொல்வது எல்லோருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இன்னொரு பக்கம் இன்னொருவர் போட்டி பொதுக்குழு நடத்துவேன் என்று கூறுகிறார். இப்படி இவர்கள் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். இரண்டு பேருக்கும் கட்சியில் பெரிய அடிதடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் கட்சிதான் பாதிக்கப்பட்டுள்ளது.

தலையிடவில்லை

தலையிடவில்லை

ஆனால் இதில் நாங்கள் தலையிட்டுக்கொள்ளவில்லை. நாங்கள் தலையிட்டால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்று அமைதியாக இருக்கிறோம், என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். முன்னதாக ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மோதலில் ஆளும் திமுக தரப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி டீம் புகார் வைத்தது. இந்த நிலையில்தான் அதை மறுக்கும் வகையில் நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

எடப்பாடி ஆதரவாளர்

எடப்பாடி ஆதரவாளர்

சமீபத்தில் எடப்பாடி ஆதரவாளர் கே.பி முனுசாமி அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஓ பன்னீர்செல்வத்திற்கு மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் உதவி செய்கிறார். மறைமுகமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு வகைககளில் ஸ்டாலின் உதவி செய்கிறார். தன்னை எதிர்க்க கூடிய, தனக்கு எதிராக அரசியல் செய்ய திறமை கொண்ட ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஸ்டாலினுக்கு தெரியும். மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் எடப்பாடி என்று ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருகிறார் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் உதயநிதி அதை மறுத்து பேசி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+