Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமங்கலம்: மதுபோதையில் நீயா? நானா? வானத்தை நோக்கி 'சீறிப் பாய்ந்த தோட்டக்கள்'.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை அருகே திருமங்கலத்தில் கோவில் கறிவிருந்தில் மதுபோதையில் நடந்த தகராறில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கறிஞர் வேதகிரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் டி.கொக்குளத்தைச் சேர்ந்த தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனசேகரன் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கிடாய் விருந்து வைத்துள்ளார். தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்பதால் அது தொடர்பான நண்பர்களை கிடாய் விருந்துக்கு அழைத்துள்ளார்.

இந்த விருந்திற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கறிஞர் வேதகிரி மற்றும் திருமங்கலம் அருகே தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். விருந்திற்கு வந்தவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மரத்தடி ஒன்றில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

மதுபோதையில் நீயா? நானா?

மதுபோதையில் நீயா? நானா?

மது போதை அதிகமாகவே அங்கிருந்த கணபதி மற்றும் வேதகிரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி நீ பெரிய ஆளா.? நான் பெரிய ஆளா.? நீயா? நானா? என காண்பிக்கிறேன் பார் எனக் கூறி தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதில் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடி விட்டனர்.

மூன்று பேரிடம் விசாரணை

மூன்று பேரிடம் விசாரணை

இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான விசாரணை மேற்கொண்டனர். கோவிலுக்கு போலீசார் வருவதை கண்ட வேதகிரி தனது காரில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி கிடாய் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் தப்பி ஓடிய வேதகிரி அலுவலக உதவியாளர் சக்திவேல் மற்றும் கணபதி ஆகிய 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

வக்கீல் வேதகிரி கைது

வக்கீல் வேதகிரி கைது

கைத் துப்பாக்கியால் சுட்ட வேதகிரியை உடனடியாக பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவத்தை அடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் செளந்தர்யா மற்றும் வட்டாட்சியர் சிவராமன் உள்ளிட்டோர் பத்ரகாளி கோவில் வளாகம் அருகே விசாரணை மேற்கொண்டு வந்தனர். கைதுப்பாக்கியால் சுட்டு காண்பித்து விட்டு தலைமறைவாக இருந்த வேதகிரியை நேற்று இரவு தனிப்படை போலீசார் பிடித்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

லைசென்ஸ் ரத்து?

லைசென்ஸ் ரத்து?

வேதகிரி வைத்திருந்த கைதுப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா என விசாரணை நடத்தியதில் கைத்துப்பாக்கிகான ஆவணங்களை வேதகிரி வைத்திருந்தார். தொடர்ந்து., அவர் மீது சட்ட விதிமுறைகளை மீறி ஆயுதம் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சட்ட விதிகளை மீறி கைதுப்பாக்கி பயன்படுத்திய குற்றத்திற்காக அவரது கைதுப்பாக்கி உரிமம் திரும்ப வாங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+