Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வங்கியில் 32 கிலோ தங்கநகை கொள்ளை.. காவலாளி, போலீசார் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை நடந்துள்ளது பற்றி காவலாளி மற்றும் போலீசார் அதிர வைக்கும் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி உள்ளது. இந்த வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்து வந்தனர்.

இந்நிலையில் வங்கிக்குள் மாஸ்க் அணிந்து நுழைந்த 3 மர்மநபர்கள் ஊழியர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

4 தனிப்படை போலீசார்

4 தனிப்படை போலீசார்

முதற்கட்ட விசாரணையில் பணம், நகைகள் என கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கழிவறையில் பூட்டிவைத்து

கழிவறையில் பூட்டிவைத்து

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தற்போது காவலாளி மற்றும் போலீசார் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொள்ளை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கியில் பணி செய்யும் முருகன் என்பவர் 2 பேருடன் வந்துள்ளார். அவர் கவாலாளியான சரவணனுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அவர் மயங்கினார். இதையடுத்து உள்ளே சென்றனர். வங்கியின் லோளாளர் சுரேஷ் மற்றும் வாடிக்கையாளர் சேவை எக்ஸ்சிகியூட்டிவ்வாக உள்ள விஜயலட்சுமி ஆகியோரை கத்தியால் மிரட்டி கழிவறையில் அடைத்தனர்.

32 கிலோ தங்க நகைகள்

32 கிலோ தங்க நகைகள்

மேலும் அவர்களிடம் இருந்து சாவியை பறித்தவர்கள் லாக்கரை திறந்து நகைகளை அள்ளி சென்றனர். இதன் மதிப்பு பலகோடி ரூபாயாகும். மொத்தம் 32 கிலோ தங்க நகைகள் வரை கொள்ளையடித்துள்ளனர். வங்கி ஊழியர் முருகன் பற்றிய விபரங்களை சேகரித்துள்ளோம். விரைவில் கைது செய்வோம்'' என போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையே வங்கி கொள்ளையில் முக்கிய நபராக கருதப்படும் நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். முருகன் என்பவரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதோடு வங்கி கொள்ளையர்களை பிடிக்க சென்னை நகரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலாளி கூறுவது என்ன?

காவலாளி கூறுவது என்ன?

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியின் காவலாளி சரவணன் கூறுகையில், ‛‛மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தனர். நான் வேண்டான் என்று கூறினேன். ஒரு மாதிரியாக உள்ளது எனக்கூறி நான் சாப்பிடவில்லை என்று கூறினேன். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி கூறினர். இதையடுத்து குடித்தேன். அது ஒருமாதிரியாக இருந்ததால் கீழே ஊற்றிவிட்டேன். கொஞ்சம் தலைசுற்றியது. இதனால் சாப்பாடு சாப்பிட்டேன். எனக்கு குளிர்பானம் கொடுத்தவர் இங்கு பணியாற்றுபவர் தான். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+