Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கொடுங்கையூரில் காதலனுடன் வாழ்ந்த ஐடி பெண் ஊழியர் நித்யா.. இருந்த கோலம்..பெற்றோருக்கே ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்யா என்ற பெண், அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் வந்துள்ளனர். நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் காதலன் பாலமுருகன் திரும்பி வந்து பார்த்தால், ஐடி ஊழியர் நித்யா இருந்த நிலையை கண்டு ஆடிப்போனார்.

சென்னை திருவொற்றியூர் காந்தி நகரைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் வரலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நித்யாவுக்கு 26 வயது ஆகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், சென்னை, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நித்யா, கடந்த 8 மாதங்களாக தனது வீட்டில் வசிக்கவில்லை. அம்பத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் நித்யாவுக்கு சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 28 வயதாகும் பாலமுருகன் என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தனர். பாலமுருகன், ஓட்டல் மேலாண்மை படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.

IT employee love

இந்தநிலையில் காதலனுடன் வாழ விரும்பிய நித்யா, கடந்த 2 மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 7-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனது காதலன் பாலமுருகனுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் மதியம் நித்யா, தனது காதலன் பாலமுருகனிடம், "எனது பெற்றோர் வீட்டுக்கு வருகிறார்கள். இதனால் நீ வீட்டில் இருக்க வேண்டாம்" என்று கூறினாராம். இதையடுத்து பாலமுருகன், தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்துள்ளார்.

வீட்டின் உள்ளே அவரது காதலி நித்யா, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகில் பெயர் தெரியாத நிறைய மாத்திரைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்தபோது நித்யா, ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நித்யா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுத நித்யாவின் பெற்றோர், "எங்கள் மகள் ஒரு வாலிபருடன் பழகி வருவது மட்டுமே எங்களுக்கு தெரியும். இருவரும் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தது பற்றி எங்களுக்கு தெரியாது என்று கண்ணீர் மல்க கூறினார்கள். மேலும் வீட்டில் இருந்த நித்யாவின் 25 பவுன் நகைகளை காணவில்லை என்றும் போலீசாரிடம் புகார் செய்தனர்.

இதுபற்றி நித்யாவின் காதலன் பாலமுருகனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாலமுருகன் போலீசாரிடம் கூறும் போது, "நித்யா அம்பத்தூரில் தங்கி இருந்தபோது, யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்தே அவரது கழுத்தில் நான் தாலி கட்டினேன். அதன்பிறகுதான் நாங்கள் கொடுங்கையூரில் உள்ள இந்த வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். 2 நாட்களுக்கு பிறகு நான் கட்டிய தாலியை நித்யா கழட்டி வைத்துவிட்டு வேலைக்கு சென்று வந்தார். நித்யாவின் பெற்றோர் அடிக்கடி அவருக்கு போன் செய்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்கள் என்று குற்றம்சாட்டினார்.

இதனிடையே நித்யாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனிடம் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே நித்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+