கோவை டூ சென்னை விமானம்.. பிரபல பெண் தொழில் அதிபருக்கு நடந்த சம்பவம்.. இளைஞர்கள் மீது போலீசில் புகார்
சென்னை: கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் சென்னை மீனாம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்த போது விமானத்தில் 35 வயதாகும் பிரபல பெண் தொழில் அதிபர் வந்துள்ளார். அவரது இருக்கைக்கு, பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் கூச்சல் போட்டு ரகளையில் ஈடுபட்டார்களாம். அதனை கண்டித்த பெண் தொழிலதிபரை அந்த இளைஞர்கள் அசிங்கமாக திட்டியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 140 பயணிகளுடன் சென்னைக்கு கடந்த 12ம் தேதி இரவு வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.. விமானத்தில் 35 வயது பெண் தொழில் அதிபர் ஒருவரும் பயணித்துக் கொண்டிருக்கிறார். பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள்,கூச்சல் போட்டு, சத்தமாக பேசிக்கொண்டு, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

தட்டிக்கேட்ட பெண் தொழில் அதிபர்
அதனை கண்ட பெண் தொழில் அதிபர் அந்த இளைஞர்களை கண்டித்ததுடன். அமைதியாக பயணம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறினாராம். மேலும் ஏன் இவ்வாறு கூச்சல் போட்டு, சக பயணிகளுக்கு இடையூறு செய்கிறீர்கள்? என தட்டிக்கேட்டதாக சொல்லப்படுகிறது.
திட்டினார்களாம்
இதனால் அந்த இளைஞர்கள், மோசமான வார்த்தைகளால் பெண் தொழில் அதிபரை திட்டியதுடன், அவரிடம் ரகளை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர், விமான பணிப் பெண்களிடம் புகார் அளித்தார். அவர்கள், அந்த வாலிபர்களிடம் அமைதியாக இருக்கும்படி கூறினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டு அசிங்கமாக பேசி ரகளை செய்ததாக கூறப்படுகிறது.
பெண் தொழிலதிபரை இடித்த இளைஞர்
இந்த நிலையில் விமானம் இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் நின்ற இடத்தில் இருந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு வருவதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் 'பிக்கப்' பேருந்தில் ஏறி வந்தனர். அப்போதும் பெண் தொழில் அதிபரை வாலிபர்களில் ஒருவர் முழங்கையால் இடித்தாராம்.
கோவையில் பள்ளி நடத்துகிறார்
இதையடுத்து பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் தொழில் அதிபரிடம் மோசமாக நடந்து கொண்ட 3 பயணிகள் யார்? என்று தெரியவில்லை. விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பயணியின் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 வாலிபர்களின் டிக்கெட் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பிட்ட பெண் தொழில் அதிபரின் கணவர், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு துறையில் உயர் அதிகாரி என்றும், அந்த பெண் சென்னை மற்றும் கோவையில் பள்ளிக்கூடம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications