சென்னை புழலில் ஒரு குடும்பத்திற்கே எமனாக மாறிய ஜெனரேட்டர் புகை.. மறந்தும் இந்த தப்பு பண்ணிடாதீங்க
சென்னை: சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இவர் தனது இரண்டு மகன்களுடன் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் செல்வராஜ், வீட்டில் இருந்த ஜெனரேட்டரை இயக்கி உள்ளார். அதில் வந்த புகை குடும்பத்திற்கே எமனாகி உள்ளது.
வீட்டில் ஜெனரேட்டர் வைக்கும் போது திறந்த வெளியில் தான் ஜெனரேட்டரை வைக்க வேண்டும். அதன்புகை வீட்டின் அறைக்குள் வரும்படி இருக்கவே கூடாது. ஏனெனில் பெட்ரோல் மூலம் இயங்கும் ஜெனரேட்டரை வீட்டிற்குள் அல்லது ஒரு சிறிய அறையில் இயக்குவது மிகவும் ஆபத்தானது.

என்ன நடக்கும்
ஜன்னல்கள் மூடப்பட்டு ஏர் கண்டிஷனரை இயக்கினால் கூட பெட்ரோல் ஜெனரேட்டர்கள் கார்பன் மோனாக்சைடை (CO) உற்பத்தி செய்கின்றன, இது நிறமற்ற, மணமற்ற வாயு என்பதால் சுவாசிப்போருக்கு எமனாகிவிடும். தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் குமட்டல் போன்றவை ஏற்பட்டு உயிரிழப்பிற்கு காரணமாகிவிடும். தூக்கத்தில் இருப்போருக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துபோவார்கள் அப்படி ஒரு சம்பவம் தான் புழலில் நடந்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் சென்னையில் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இதற்காக சென்னையிலேயே குடும்பத்துடன் வசித்து வந்தார். சென்னையை அடுத்த புழல் கதிர்வேடு பிரிட்டானியா நகர் 10-வது தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி பெயர் மாலா(50). இவர்களுக்கு ஒரு மகள் இதயா(16). இரண்டு மகன்கள் சுமன்ராஜ்(15), கோகுல்ராஜ்(13) இருந்தனர்.
படுக்கை அறை
இதில் சுமன்ராஜ் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய இருவரும் புழல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டுள்ளார்கள். பின்னர் மாலா, தனது மகள் இதயாவுடன் ஒரு அறையிலும், செல்வராஜ் தனது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோருடன் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கியிருக்கிறார்கள்.
கதவை தட்டிய மாலா
நேற்று காலையில் எழுந்த மாலா, டீ போட்டுவிட்டு கணவர் மற்றும் மகன்களை எழுப்ப சென்றுள்ளார்,. நீண்ட நேரம் தட்டியும் அவர்கள் அறை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார். அங்கு செல்வராஜ் மற்றும் அவரது 2 மகன்களும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி உடனே போலீசுக்கு தகவல் தந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீசார் 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகை நெடி
3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என முதலில் போலீசார் கருதினர். ஆனால் அவர்கள் விஷம் குடித்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதால் , தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இறந்து கிடந்த அறையில் ஜெனரேட்டர் புகை நெடி அடித்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மின்சாரம் தடைபட்டதால் செல்வராஜ், வீட்டில் இருந்த ஜெனரேட்டரை இயக்கி இருக்கிறார். அதில் இருந்து வெளியேறிய புகை தந்தை மற்றும் மகன்கள் படுத்து இருந்த அறைக்குள் பரவி உள்ளது. இதனால் 3 பேரும் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஜெனரேட்டர் புகை
செல்வராஜின் மனைவி, மகள் இருவரும் மற்றொரு அறையில் தூங்கியதால் அவர்கள் உயிர் தப்பினர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே 3 பேரின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் ஜெனரேட்டர் புகை காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications