டைவர்ஸ் ஆன முன்னாள் கணவர் இறந்து விட்டால் ஜீவனாம்சம் என்னாகும்? வாரிசுகள் சொத்தையும் தர வேண்டுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவாகரத்து பெற்று பிரிந்த தம்பதிகளுக்கு இடையே, ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக பல்வேறு சட்ட நடைமுறைகள் நாட்டில் அமலில் உள்ளன. ஆனால் விவாகரத்துக்கு பிறகு ஜீவனாம்சம் வழங்கி வந்த முன்னாள் கணவர் திடீரென இறந்து போனால் என்ன நடக்கும்? கணவர் இறந்த பிறகும் அந்தப் பெண்ணுக்கு ஜீவனாம்சம் கிடைக்குமா? அதற்குச் சட்டம் என்ன சொல்கிறது? இப்படியான சந்தேகங்கள் பல காலமாகவே இங்கு உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளது.

நம்முடைய நாட்டை பொறுத்தவரை, திருமண அமைப்பை வலுப்படுத்தவும், தம்பதிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் மத்திய அரசு பல்வேறு சட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Alimony

இருந்தாலும் சமீபகாலமாக நாடு முழுவதும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது. கோர்ட்டுகளுக்கு வரும் வழக்குகளில் மெஜாரிட்டியாக இருப்பது, கணவன்-மனைவிக்கு இடையிலான தகராறுகளும், டைவர்ஸ் கேஸ்களும்தான்.

ஜீவனாம்சம் - தம்பதி உறவு

நிறைய தம்பதிகள் திருமணமான ஒரு வருஷத்துக்குள்ளாகவே பல்வேறு காரணங்களால் பிரிந்து, விவாகரத்து கோரி கோர்ட் வாசற்படியை மிதிக்கிறார்கள்.. இதனால் 2 தரப்பினருக்கும் நேரமும் பணமும் வீணாகிறது. குழந்தைகள் பிறந்த பிறகும் கூட, பல்வேறு காரணங்களுக்காக விவாகரத்து கோரி வழக்குகள் தொடரப்படுவது அதிகமாகி விட்டது.

பொதுவாக விவாகரத்து செய்தாலே, கணவர் தனது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்பது சட்ட விதியாகும். ஆனால் ஒருவேளை கணவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்தினர் மற்றும் வாரிசுகளிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியுமா, முடியாதா என்பது குறித்து பலருக்கும் நீண்ட நாட்களாக சந்தேகம் உள்ளது.. இது தொடர்பான தீர்ப்பைதான், பம்பாய் ஹைகோர்ட் வழக்கில் தற்போது தெளிவுபடுத்தி உள்ளது... முதலில் தந்த வழக்கு என்னவென்று பார்ப்போம்.

கணவன் இறந்தும் ஜீவனாம்சம் வழங்கலாமா

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் வர்ஷா.. 62 வயதாகிறது.. இவருக்கும் நரேன் கோரேகாவ்ங்கர் என்பவருக்கும் கடந்த 1974ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் கிடையாது.. கருத்து வேறுபாடு காரணமாக 1977-லேயே பிரிந்த இவர்களுக்கு, 1980ல் நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தும் வழங்கியது. அப்போது வர்ஷாவுக்கு மாதம் 6000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி நரேனுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இதனிடையே கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் நரேன் இறந்துவிட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து வர்ஷாவுக்கு வழங்கப்பட்டு வந்த ஜீவனாம்சமும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால், குடும்பநல நீதிமன்றத்தை அணுகிய வர்ஷா, கணவர் மறைவுக்கு பிறகு, நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை வாரிசுகளிடமிருந்து வசூலித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்..

அத்துடன், தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் தனது மருத்துவ செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஜீவனாம்ச தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தன்னுடைய மனுவில் கோரியிருந்தார்.

பம்பாய் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

இந்த மனுவை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது.. கடந்த 2023 பிப்ரவரியில் நிலுவைத் தொகையை மட்டும் சொத்திலிருந்து வசூலிக்க அனுமதி அளித்தது. ஆனால் ஜீவனாம்சம் தொகையை மட்டும் உயர்த்தி கொடுக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து வர்ஷா பம்பாய் ஹைகோர்ட்டில் அப்பீலுக்கு போனார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பாரதி டங்க்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், வர்ஷாவின் கோரிக்கையை நிராகரித்து மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

அப்போது நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "கணவர் இறந்துவிட்டாலும், அவர் விட்டுச் சென்ற சொத்திலிருந்து நிலுவையில் உள்ள ஜீவனாம்ச தொகையைப் பெற முன்னாள் மனைவிக்கு முழு உரிமை உண்டு. அதனை அவரது குடும்பத்தினரும் வாரிசுகளும் வழங்க வேண்டும்.

ஜீவனாம்சத் தொகையை உயர்த்த முடியுமா

ஆனால் அந்த ஜீவனாம்சத் தொகையை உயர்த்தி வழங்கக் கோர முன்னாள் மனைவிக்கு சட்டப்படி உரிமை இல்லை. ஜீவனாம்சத் தொகையை இப்படி உயர்த்த அனுமதிப்பது தேவையற்ற சட்டப் போராட்டங்களுக்கே வழிவகுக்கும்.

கணவர் உயிருடன் இருந்த காலத்தில் சேர்த்த சொத்தில் மட்டுமே மனைவி உரிமை கோர முடியும். கணவரின் மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுகளின் சொந்த உழைப்பாலும் முயற்சிகளாலும் அந்த சொத்தின் மதிப்பு அதிகரித்திருந்தால், அதில் முன்னாள் மனைவி பங்கு கேட்க முடியாது.

வாரிசுகளின் சொத்தையும் தர வேண்டுமா

வாரிசுகளின் தனிப்பட்ட நிதி வளர்ச்சியை முன்னாள் மனைவியுடன் பகிரச் சொல்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். வாரிசுகள் அதற்கு கடமைப்பட்டவர்கள் அல்ல" என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவாக விளக்கி சொன்னார்கள்.

நீதிமன்றம் இந்த தீர்ப்புதான், நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பி விட்டுள்ளது.. கணவர் இறந்த பிறகும் அந்தப் பெண்ணுக்குச் சேர வேண்டிய பணம் கிடைப்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.. ஆனால் அதேசமயம் கணவரின் வாரிசுகள் தங்களது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தையோ, சொத்தையோ அந்த பெண்ணுக்குக் கூடுதலாகத் தரத் தேவையில்லை என்றும் கூறி, 2 தரப்புக்குமே நியாயமான ஒரு முடிவை நீதிமன்றம் தந்துள்ளது கவனம் பெற்றுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+