தீவிரவாதிகள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள்.. மோடி பதிலால் புதிய சர்ச்சை
சென்னை: எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறுவதன் மூலம் தீவிரவாதி என்றாலே அவர்கள் மற்ற மதத்தினர்தான் என்று அவர் கூற வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இறுதிக் கட்ட வாக்குப் பதிவு 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். மோடி முதல் கமல்ஹாசன் வரை அத்தனை பேருமே சர்ச்சையாக பேசி வருகிறார்கள். கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளரை ஆதரித்து பேசும் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துவிட்டதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கமல் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்றார். இதில் இவர் கூறிய முதல் கருத்து மட்டும் விவாதத்திற்குள்ளாகிவிட்டது.

ராஜேந்திர பாலாஜி
இவரது கருத்து வடஇந்தியா முதல் தென்னிந்தியா வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கிறேன் என்று, கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு சர்ச்சையில் சிக்கிவிட்டார்.

ஆங்கில ஊடகம்
கமல்ஹாசன் கருத்துக்கு இந்து மகாசபை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆங்கில ஊடகத்தில் ஒரு பதிலை அளித்துள்ளார்.

கேள்வி
அதில் அவர் கூறுகையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மற்ற மதத்தினர் மட்டுமே தீவிரவாதியாக இருப்பார்கள் என சொல்ல வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாதி இல்லை
தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என கூறலாம். ஆனால் இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என கூறுவது மற்ற மதத்தினரை புண்படுத்தும்படியாக உள்ளது. தனக்கு எந்த சாதியும் இல்லை என்று கூறிய பிரதமரே இந்து மதத்துக்கு ஆதரவாகவும் மற்ற மதத்திற்கு மறைமுகமாக எதிராகவும் ஒரு கருத்தை கூறியிருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆக, கமல் ஒரு பேச்சு பேசப் போய், அதற்கு கொடுக்கப்பட்டு வரும் பதில்களைப் பார்த்தால் அவையும் சர்ச்சையாகவே வருவது அதிர வைத்துள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications