Cyclone Nivar-இன் அர்த்தம் என்ன? பெயருக்கேற்ப சமர்த்தாக இருக்குமா?.. இல்லை ருத்ரதாண்டவம் ஆடுமா?
சென்னை: சென்னைக்கு மிக அருகே கரையை கடக்கும் நிவர் புயலின் அர்த்தம் என்ன தெரியுமா? அது பெயருக்கேற்ப நடந்து கொள்ளுமா இல்லை ருத்ரதாண்டவம் ஆடுமா என்பது போக போகத் தான் தெரியும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் முறையாக ஒரு புயல் சின்னம் வங்கக் கடலில் உருவாகியுள்ளது. இது சென்னை- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடலோர மாவட்டங்களில் வருவாய் துறையினரும் பேரிடர் மீட்பு துறையினரும் உஷார் நிலையில் உள்ளனர். இந்த புயல் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

புயலுக்கு பெயர்
இந்த புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு நாடும் ஒரு பெயரை பரிந்துரைத்து வைத்திருப்பர். அந்த வரிசையின் படி புயலுக்கு பெயர் வைப்பது வழக்கம் ஆகும்.

முன்னெச்சரிக்கை
இந்த பெயருக்கு நல்ல அர்த்தங்களும் உள்ளன. சில புயல்கள் பெயருக்கேற்ப செயல்படும். சில புயல்கள் பெயரின் அர்த்தத்திற்கும் அதன் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் நடந்து கொள்ளும். அந்த வகையில் நிவரின் அர்த்தம் தற்காப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை என்பதாகும்.

மழை
இந்த பெயரை சூட்டியது ஈரான் நாடாகும். இந்த புயலின் வேகம் குறைவாக உள்ளதால் கஜா போலவோ அல்லது வர்தா போன்றோ அதிக சேதத்தை உண்டாக்காமல் சென்றுவிடும் என கருதப்படுகிறது. மழையை மட்டும் கொடுத்துவிட்டு செல்லலாம்.

சேதம்
இது தீவிர புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எதுவாக இருந்தாலும் இந்த புயல் பெயரின் அர்த்தத்திற்கேற்ப நம்மை தற்காக்கிறதா இல்லை சேதத்தை ஏற்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications