EXCLUSIVE: "இருங்க வரேன்".. சசிகலாவின் திடீர் முடிவு.. என்ன செய்ய போகிறார் எடப்பாடி பழனிசாமி..?
எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு வருகை தர உள்ளாராம் சசிகலா
சென்னை: எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் வருகிற 17-ந்தேதி தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுக மேலிடத்துக்கு கலக்கம் தரும் வகையில் ஒரு செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது..!
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள், வருகிற 17-ந்தேதி விமர்சையாக கொண்டாட அதிமுக தயாராகி வருகிறது..

எடப்பாடி பழனிசாமி
இதற்காக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் கட்சி அலுவலகத்துக்கு வரஉள்ளனர்.. அதிமுக அலுவலகத்தில் இருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் மரியாதை செலுத்துகிறார்கள்..

எதிர்பார்ப்பு
இப்படிப்பட்ட சூழலில், எம்ஜிஆர் பிறந்த நாளில் சசிகலா வெளியே வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. ஆனால், கொரோனா கெடுபிடிகள் இருப்பதால், எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளியே வருவதை தவிர்க்க நினைத்திருக்கிறாராம் சசிகலா... அதுமட்டுமல்ல, வெளியில் வரமாட்டேன் என்றும் கூட தன்னுடைய ஆதரவாளர்களிடம் தெரிவித்துவிட்டாராம்.

எடப்பாடி பழனிசாமி
எனினும், அவரது நிர்வாகிகள் தான் இதை ஏற்கவில்லையாம்.. அதிமுக தலைவர்கள், கட்சி அலுவலகத்துக்கு செல்லவிருப்பதால், "எம்ஜிஆர் பிறந்தநாளில் நீங்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்தால் கழக தொண்டர்களிடம் ஒருவித சோர்வு வந்துவிடும்... ஓபிஎஸ்சுக்கும் இபிஎஸ்சுக்கும் நீங்கள் கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் அம்மா... அதனால் நீங்கள் வெளியே வரணும் அம்மா" என்ற ரீதியில் சசிகலாவிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

சசிகலா
இதனையடுத்து, தன்னுடைய முடிவை சசிகலா மாற்றி கொண்டுள்ளதாக தெரிகிறது. எம்ஜிஆர் பிறந்த நாளில் சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு 17- ந்தேதி காலை 10 மணிக்கு வர போகிறார் சசிகலா... எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்த போகிறார்.. இந்த நிகழ்ச்சியை பரபரப்பாக்க தொண்டர்களை திரட்டும் திட்டத்தில் இருக்கிறாராம்.. இப்படித்தான் தேவர் ஜெயந்தியின் போதும் சசிகலா தரப்பு பக்காவாக பிளான் செய்தது.
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
வழக்கமாக பசும்பொன்னுக்கு செல்லும் எடப்பாடி பழனிசாமி, கடந்த முறை செல்லவில்லை.. ஓபிஎஸ்ஸும் தவிர்த்துவிட்டார்.. ஆனால், சசிகலா மட்டும் நிர்வாகிகளுடன் சென்று தேவர் ஜெயந்தி விழாவை சிறப்பித்திருந்தார்.. இது சோர்வுற்றிருந்த அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், தென்மண்டல நிர்வாகிகளுக்கும் தெம்பை ஏற்படுத்தியிருந்தது.. அந்த வகையில், அதிமுக மேலிடத்துக்கே ஜெர்க் தரும் வகையில், சசிகலாவின் அடுத்த விசிட் இருக்க போவதாக சொல்கிறார்கள்.. இதை அதிமுக இரட்டை தலைமை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி












Click it and Unblock the Notifications