சிங்கிளாக போராடிய கமல்.. வெற்றிக் கோடு வரை வந்து.. எல்லாத்துக்கும் காரணம் அந்த "டாக்டர்"...!
சென்னை: கோவையில் ஒற்றை ஆளாக போராடி வரும் கமல்ஹாசன் வாக்கு வேட்டை நடத்த உறுதுணையாக இருந்தவர் டாக்டர் மகேந்திரன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருப்பவர் மகேந்திரன். இவர் மருத்துவராவார். கோயமுத்தூர்காரர்.
கறைப்படியாத கைகளுக்கு சொந்தக்காரர். கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் நிர்வாகிகள் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தாரோ அதற்கு சரியானவர் மகேந்திரன்.

மநீம
மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வாங்கும் போதே தேர்தலுக்கு ஆகும் செலவை வேட்பாளரே பார்த்துக் கொள்ள வேண்டும். கட்சி சார்பில் பணம் கொடுக்கப்படாது என வெளிப்படையாகவே கமல்ஹாசன் அறிவித்தார்.

சம்பாதித்தல்
அது போல் தன்னுடன் வருபவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கமல் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

பின்னடைவு
அங்கு இவரை எதிர்த்து திமுக சார்பில் காங்கிரஸின் மயூரா ஜெயக்குமாரும், அதிமுக சார்பில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனும் போட்டியிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கையின் போது ஆரம்பத்திலிருந்தே கமல்ஹாசன் பின்னடைவை சந்தித்தார்.

மயூரா ஜெயக்குமார்
மயூரா ஜெயக்குமாரும், வானதியும் மாறி மாறி முன்னிலை வகித்தார்கள். இதையடுத்து கமல்ஹாசன் அந்த இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னிலை வகித்த நிலையில் மறுபடியும் இழுபறி நீடிக்கிறது. புதிதாக கட்சி தொடங்கினாலும் கமல்ஹாசன் இரு பெரும் கட்சிகளுக்கு டஃப் பைட் கொடுத்து வருகிறார்.

பிழைப்பு
இவரது வெற்றிக்கு காரணம் கமல்ஹாசனின் சினிமா புகழ், அவரது கள ஆய்வு ஆகியவற்றுடன் சேர்த்து ஒரு முக்கிய நபரும் காரணமாகிறார். அவர்தான் மகேந்திரன். இவருக்கு கோவையில் செல்வாக்கு அதிகம். கோவையில் இவரை நம்பி 1000 முதல் 1500 குடும்பங்கள் வரை பிழைப்பு நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

காரணம்
மேலும் இவர் ஒரு தொழிலதிபர். இவருக்கு நற்பெயர் இருக்கிறது. எனவே கமல்ஹாசனின் இந்த கடும் போராட்டத்திற்கு மகேந்திரனும் முக்கிய காரணமாவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவர் கைகாட்டும் நபருக்கு வாக்களிப்பார்கள் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications