வைத்திலிங்கமும் இல்லை.. ரவீந்திரநாத்தும் இல்லை.. அதிமுகவை சேர்க்காமல் கைவிட்ட பாஜக!
மத்திய அமைச்சர் பதவி தொடர்பாக அதிமுகவுக்குள் ஒருவித அமைதி நிலவி வருகிறது.
Recommended Video
சென்னை: மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுகிறது. இருப்பினும் அதன் முழு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக காணப்படுகிறது கட்சி வட்டாரம்.
தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்தது. முழுமையான வெற்றியை அது பெறாமல் போனதே அதற்குக் காரணம். மறுபக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி, வாரணாசி என பிசியாக இருந்து வந்தார்.
இடைத்தேர்தலுக்கு இங்கே ஆளாளுக்கு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால், துணை முதல்வரை தமிழ்நாட்டிலேயே காணோம். மகனை அழைத்து கொண்டு வாரணாசி சென்றார். அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து சில பல விஷயங்களை விவாதித்தார். அப்போதே அதிமுகவில் முனுமுனுப்பு கிளம்பியது.

முணுமுணுப்புகள்
மே 23-க்கு பிறகு பெரிய அளவிலான பேச்சுகள், பேட்டிகள் என எதுவுமே இல்லை. வழக்கமாக ஏதாவது பேசி சர்ச்சைகளை அள்ளி வீசும் அமைச்சர்கள்கூட கப்சிப் ஆனார்கள். மத்திய அமைச்சர் பதவியை மகனுக்கு வாங்கி தந்தே தீருவது என டெல்லியில் ஓபிஎஸ் தரப்பு டேரா போடவும்தான் கட்சிக்குள் சலசலப்புகள், முணுமுணுப்புகள் எழ ஆரம்பித்தன.

வைத்திலிங்கம்
இப்போ வந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியா என்ற கேள்வி எழுந்ததுடன், ரவீந்திரநாத்துக்கு பதிலாக வைத்திலிங்கத்தை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. ஓபிஎஸ் மகனுக்கு பதில், வைத்திலிங்கம் வந்தால் ஒருவிதத்தில் லாபம் என்று ஒரு கட்டத்தில் முதல்வரும் இதற்கு ஒப்புக் கொண்டார். பாஜக தலைமையிடமும் பேசினார். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை.

நிலவும் நிசப்தம்
ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி உறுதியாகி விட்டதைத் தொடர்ந்து அதிமுக தரப்பு அமைதி காக்கிறது. இதுதொடர்பாக கருத்தறிய அணுகினால் யாரும் பேச மறுக்கிறார்கள். கருத்து சொல்லவில்லை, பேட்டி அளிக்கவில்லை, ட்வீட் போடவில்லை! எல்லா பக்கமும் நிசப்தம் நிலவுகிறது.

வெடித்து கிளம்புமா?
காலம் காலமாக மூத்த தலைவர்கள், கட்சிக்காக பாடுபட்டவர்கள், நிர்வாகிகள் உட்பட பல சீனியர்கள் இருந்தும், இப்போது வந்த ரவீந்திரநாத் குமாருக்கு பொறுப்பு என்பதை எந்த அளவுக்கு மனசார வரவேற்பார்களோ என்ற கேள்வியும் எழுந்தது. எனினும் வாயை திறக்காமல் ரொம்பவும் அமைதி காத்து வருகிறது.

மறுப்பு
இந்தநிலையில், ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சரவையில் எந்த பதவியும் கடைசிவரை தரவில்லை. அதிமுக வைத்திலிங்கத்துக்காக முயற்சித்தும், ஓபிஎஸ் மகனுக்காக முயற்சித்தும் எந்த பதவியும் வழங்கப்படாதது ஏமாற்றமே. இதனை கூட்டணியில் உள்ள அதிமுக எந்த அளவுக்கு எதிர்கொள்ள போகிறது, பாஜகவிடம் என்ன மாதிரியான அணுகுமுறையை கையாள போகிறது என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?











Click it and Unblock the Notifications