Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதென்ன யு.ஏ.சி.. சென்னையை புரட்டி போட்ட இரவு மழைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடல் பகுதியில் திடீரென ஏற்பட்டு உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது.

அது என்ன வளிமண்டல மேலடுக்கு சுழற்சி? : சென்னையில் இப்படி திடீரென மழை பெய்வதற்கு காரணமாக அமைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்றால் என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழும் வாய்ப்புகள் உள்ளன.

What is upper air circulation and Why it is causing heavy rain in Chennai suddenly?

அதை பற்றி இங்கே சுருக்கமாக விளக்கி உள்ளோம். பொதுவாக வங்கக்கடலின் மேல் பகுதியில் இருக்கும் சூடான காற்று மேலே செல்லும். இந்த காற்று மேலே செல்ல செல்ல காற்று அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படும்.

மேலே செல்ல செல்ல இந்த காற்றின் வெப்பம் குறைந்து வெப்பநிலை குறையும். அதன்பின் இந்த காற்று பொதுவாக ட்ரோபோஸ்பியர் பகுதியில் இருந்து மேலே செல்லும். அதன்பின் இதே காற்று மேற்கு திசையில் நகரும்.

14 கிமீ உயரத்தை அடைந்ததும் இந்த காற்று இப்படி நகர்வதைத்தான் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பார்கள். இந்த காற்று மூலம் வரக்கூடிய மழை மேகங்கள்தான் வங்கக்கடலில் மழையை கொடுக்கும். இதுதான் தற்போது சென்னைக்கு மேலே வந்த நிலையில் மழையை கொடுத்துள்ளது.

எங்கெல்லாம் மழை பெய்கிறது: நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து உள்ளது.

ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்துள்ளது.

இது போக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இப்போதும் விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது. கடந்த 2 மணி நேரமாக இங்கு மழை பெய்து கொண்டு இருக்கிறது.

சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது

What is upper air circulation and Why it is causing heavy rain in Chennai suddenly?

அதிகாலையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

3 மணி நேரம்: மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் உள்ள இந்த 9 மாவட்டங்களுக்கு மட்டுமே ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் மாதத்தில்.. தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படி மேகங்கள் நகர்வது அரிதானது. இந்த கரு மேகங்கள் நிலப்பரப்பிற்கு மேலே வரும் முன் வலிமை இழக்க வேண்டும். ஆனால் இவை வலிமை இழக்காமல் தொடர்ந்து இவை நகர்ந்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+