ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சொன்னது என்ன? தலைமை நீதிபதி உத்தரவிட்டது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்றத்தில் கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது ஆளுநர் ரவி அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் என்கிற வாதத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்தது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் வைத்திருந்தார். 2020-ம் ஆண்டு முதல் பல மசோதாக்கள், கோப்புகள் ஆகியவற்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் தரவில்லை. இதனையடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

What Said Tamil Nadu Govt in Supreme Court in Governror RN Ravi case

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் வைத்துள்ளார். தண்டனைக் காலத்துக்கு முன்பு விடுவிப்பதற்கான 54 கைதிகளின் கோப்புகளும், தமிழ்நாடு அரசுப் பணியாளருக்கான 14 பதவிகளில் 10 நியமனங்களுக்கான கோப்புகளும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ளன. " கூடிய விரைவில்" என்கிற வார்த்தையை ஆளுநர் தவறாகப் பயன்படுத்த முடியாது. ஆளுநர் என்ற அதிகாரத்தையும் அந்த பொறுப்பையும் ஆர்.என்.ரவி முறைகேடாகப் பயன்படுத்துகிறார் என வாதிடப்பட்டது.

இந்த வாதங்களைத் தொடர்ந்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அரசமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி மசோதாக்களுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது. அத்துடன் ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இதனிடையே இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தம் வசம் இருந்த 10 நிலுவை மசோதாக்களை தமிழ்நாடு சட்டசபைக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு அரசும் சட்டசபை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்போது 10 மசோதாக்களுக்கு ஆளுநர் மீண்டும் ஒப்புதல் தருவாரா? அல்லது திருப்பி அனுப்புவாரா? இதில் உச்சநீதிமன்றம் தலையிடுமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+