அமித்ஷாவின் கணக்கே வேற.. திரும்ப திரும்ப அசைந்த தாமரை.. பார்வையை பாஜக மீது திருப்பும் திமுக, அதிமுக?
சென்னை: 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரச்சாரம், இன்றும் தொடர்கிறது. இது, தமிழக அரசியலில் கூடுதல் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி வருகிறது.
எம்பி தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேசிய தலைவர்களும் தமிழக பிரச்சாரங்களுக்கு படையெடுத்து வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தமிழகம் வந்திருக்கிறார்.

மதுரை நேதாஜி சாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நேற்று நடைபெற்றது. அப்போது சாலையில் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள், பாஜகவினரும் திரண்டு வந்து அமித்ஷாவுக்கு வரவேற்பு அளித்தனர்.. கொடிகளை ஏந்தியவாறு உற்சாகத்துடன் கையசைக்கும் தொண்டர்களின் வரவேற்பை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.
பிரச்சாரம்: இந்த ரோடு ஷோவில் கையில் தாமரையை வைத்திருந்தார் அமித்ஷா.. அதனை தொண்டர்களிடம் காட்டி கையசைத்தவாறே இருந்தார்.. பிறகு, தொண்டர்கள் தந்த தாமரை மாலை, தலைப்பாகையை வேட்பாளர் ராம சீனிவாசனுக்ககு அமித்ஷா அணிவித்தார். தொடர்ந்து வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு ஆதரவாக அமித்ஷா வாக்கு சேகரிப்பிலும் ஈடுப்பட்டார்.
அப்போது பேசிய அமித்ஷா, தமிழத்தின் பெருமையை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பறைசாற்றி வருபவர் பிரதமர் மோடி மட்டுமே. என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்பதற்காக மன்னிட்டு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர், இந்த முறை தமிழக மக்கள் தாமரை பட்டனை அழுத்த வேண்டும். இங்கு கூடியிருக்கும் கூட்டம் 100 சதவீத வாக்குகளாக மாற வேண்டும்" என்றார்.
தக்கலை: இந்நிலையில், இன்று காலையில் மதுரையில் இருந்து அமித்ஷா, 9.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சென்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.. பின்னர், திருவனந்தபுரம் சென்று விமானத்தில் திருச்சி வந்து ஓட்டலில் மதிய உணவு முடித்து ஓய்வு எடுக்கிறார்.
அதேபோல, மதியம் 3 மணிக்கு நாகை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசி லோக்சபா தொகுதியில் பிரச்சாரத்திலும் பங்கேற்கிறார். இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடும் நிலையில் அமித்ஷா அவருக்காக பிரச்சாரம் செய்ய போகிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பல் தலைமையில் பலத்த பாதுகாப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன..
பிரச்சாரம்: மொத்தம் 5 தொகுதிகள், அதாவது மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நாகை, தென்காசி தொகுதிகளை டார்கெட் செய்துள்ள நிலையில், இன்றைய தினமும் அமித்ஷாவின் பிரச்சாரம் தொடர்கிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!











Click it and Unblock the Notifications