நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது.. நகராட்சி தலைவர்கள் தேர்வு எப்படி? அமைச்சர் விளக்கம்
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் நேரடியாகவும், இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதிதாக உருவான மாவட்டங்களுக்கு வார்டு வரையறை பிரித்த பின்னரே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதால் கடந்த 2019ம் ஆண்டு இந்த மாவட்டங்களுக்கு நடைபெறவில்லை. ஆனால் அதன்பிறகு கொரோனா வந்ததன் காரணமாக தேர்தல் நடைபெறவே இல்லை.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

பெரிய வெற்றி
இந்தத் தேர்தலில் வெற்றியை ஆளும் திமுக கூட்டணி 93 சதவிகித பெற்றது. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் படுதோல்வியை சந்தித்தது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒன்றை கூட கைப்பற்றவில்லை. அ.தி.மு.க அணியில் இருந்து விலகிய பா.ம.கவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

உள்ளாட்சியில் முறைகேடு
இதனிடையே திமுக கூட்டணி இந்த வெற்றியால் பெரும் உற்சாகத்தில் உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர். உள்ளாட்சியில் முறைகேடுகளை அரங்கேற்றியே தி.மு.க வெற்றி பெற்றது என அ.தி.மு.க நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகிறது.

திமுக இறங்கி உள்ளது
இதனிடைடையே இதன் அடுத்தகட்டமாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தி.மு.க இறங்கி உள்ளது. தற்போதைய நிலையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி வரக் கூடிய நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் ஆகும்.

நகராட்சிகள் தரம்
திருச்சியில் அண்மையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. இதற்காக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையம் சொல்லக் கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும்" என்று கூறினார்.

மறைமுக தேர்தல்
இந்த நிலையில் இது பற்றி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறும் போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும். இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் நேரடியாகவும், இருக்கலாம், மறைமுகமாகவும் இருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றார்.

வெற்றி எப்படி
இதனிடையே அரசியல் விமர்சகர்கள் இதுபற்றி கூறும் போது, தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெறும். அதுவே, தேர்தல் சற்று தள்ளிப் போனாலோ, தி.மு.க மீது குற்றச்சாட்டுகள் கிளம்பினாலோ ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவானால் தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு பாதகமானதாக மாறலாம். தற்போதைய நிலையே தொடருமானால் தி.மு.க வெற்றி பெறும் என்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications