சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இபிஎஸ்- ஓபிஎஸ்ஸுக்கு ஷாக்! அதிமுக ஆபீஸுக்கு சசிகலா எப்போது வருகிறார்? ஆதரவாளர்கள் சொன்ன புது தகவல்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா எப்போது வருகை தருகிறார் என்பது குறித்து தொண்டர்கள் தகவல்களை அளித்துள்ளனர்.

அதிமுகவில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையே சிறு புகையாக இருந்து வந்த நெருப்பு தற்போது பற்றி எரிகிறது. அதிமுகவிலிருந்து இரு தலைமைகளும் ஒருவரை ஒருவர் நீக்கிக் கொண்டனர். மேலும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டார்கள்.

ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே அக்கட்சிக்கு வெற்றிக் கிடைக்கும் என்பது ஏற்கெனவே ஆர் கே நகர் இடைத்தேர்தலில் அறிந்த ஒன்றுதான். அந்த இடைத் தேர்தலில் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பினர் இரட்டை இலை முடக்கப்பட்டதால் தனித்தனியே சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர்.

வண்டியை விடுங்க! ஓபிஎஸ் அஸ்திவாரத்தையே அசைக்கும் பிளான்! எடப்பாடி போடும் ட்ரிப்! குலுங்கும் சவுத் வண்டியை விடுங்க! ஓபிஎஸ் அஸ்திவாரத்தையே அசைக்கும் பிளான்! எடப்பாடி போடும் ட்ரிப்! குலுங்கும் சவுத்

அதிமுக வெற்றி

அதிமுக வெற்றி

எனவே அதிமுக வெற்றி என்பது அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே நடக்கும். இவ்வாறு அதிமுகவில் புயல் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அதை சீரமைக்க கட்சியை தான் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என சசிகலா திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு பக்கம் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

அதிமுக ஒன்றிணையும்

அதிமுக ஒன்றிணையும்

விரைவில் அதிமுக ஒன்றிணையும். பிரிந்தவர்கள் மீண்டும் சேர்வார்கள் என சசிகலா கூறுகிறார். இதற்காக அவர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை எல்லாம் சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அவரது திநகர் இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதிமுகவுக்கு தலைமையேற்க அழைப்பு

அதிமுகவுக்கு தலைமையேற்க அழைப்பு

அது போல் அதிமுகவுக்கு தலைமையேற்கவும் அழைத்தனர். இந்த நிர்வாகிகளில் மூத்த நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் சுயநலத்திற்காக இது போல் அடித்துக் கொள்கிறார்கள். இந்த புதிய பதவிகள் எல்லாம் சில காலத்திற்கு மட்டுமே இருக்கும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிந்த பிறகு சசிகலா நிச்சயம் அதிமுக ஆபிஸுக்கு வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்கள்.

Recommended Video

    Sasikala உடன் OPS Team இணைவதாக வந்த செய்தி | பதில் சொன்ன OPS தரப்பு *Politics | Oneindia Tamil
    சசிகலா ஆதரவாளர்கள்

    சசிகலா ஆதரவாளர்கள்

    இது குறித்து சசிகலா ஆதரவு நிர்வாகிகளிடம் கேட்ட போது அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் தீர்ப்பு சசிகலாவுக்கு சாதகமாகத்தான் வரும். அது போல் அதிமுக தலைமை அலுவலகத் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் தீர்ப்புகள் வந்த பிறகு சசிகலா நிச்சயம் தலைமை அலுவலகத்திற்கு வருவார். அவரது தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து 2026 இல் இரட்டை இலை ஆட்சி அமையும் என்றனர்.

    English summary
    when will Sasikala go to AIADMK party office?, says her supporters.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X