Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் முடியலை.. நிலவில் தூங்கும் லேண்டர், ரோவர் கண்விழிக்குமா? இஸ்ரோ தலைவர் சோமநாத் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்த விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வர இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகின்றனர். தற்போது வரை சிக்னல் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் 2வது இன்னிங்ஸை தொடங்குமா? என்பது குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத் முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய விண்வெளி துறையில் மகத்தான நாளாக கடந்த மாதம் (ஆகஸ்ட்) 22ம் தேதி அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரோவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது தான்.

When will Vikram Lander and Pragyan rover wakeup on moon surface? ISRO chief Somanath says this

கடந்த மாதம் 22ம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் தரையிறங்கியது. அதன்பிறகு விக்ரம் லேண்டரின் இதயப்பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறிய நிலவில் இறங்கியது. அதோடு நிலவின் மேற்பரப்பின் இந்திய தேசிய சின்னம் மற்றும் இஸ்ரோ லோகோவை பதித்தது.

இதன்மூலம் நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியா தரையிறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு இந்த 3 வல்லரசு நாடுகளும் அஞ்சி நடுங்கிய நிலையில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து நிலவில் விக்ரம் லேண்டர், ரோவர் கருவிகள் பல ஆய்வுகளை செய்தன.

ஆக்சிஜன் உள்பட 8 தனிமங்களை ரோவர் கண்டறிந்தது. அதோடு நிலவில் ஏற்படும் அதிர்வுகளை ஆய்வு கருவியில் பதிவானது. இதுமட்டுமின்றி நிலவின் மேற்பரப்பை பல்வேறு கோணங்களில் ரோவர் தனது கேமரா மூலம் படமெடுத்து விக்ரம் லேண்டர் மூலம் இஸ்ரோவுக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் லேண்டர், ரோவர் ஆகியவை அதில் உள்ள சோலர் பேனல்கள் மூலம் சூரியஒளியை பெற்று செயல்படும்.

ஆனால் நிலவில் 14 நாளுக்கான இருள் சூழ்ந்ததால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் செயல்படாமல் வைக்கப்பட்டது. தற்போது அங்கு சூரியஒளி பட தொடங்கி உள்ளதால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை சிக்னல் கிடைக்காத நிலையில் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். கடந்த 22ம் தேதி முதல் விக்ரம் லேண்டர், ரோவருக்கு மறுபிறவி கொடுக்கும் செயலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் மீண்டும் செயல்பாட்டு வருமா? இல்லையா? என்பது பற்றி இஸ்ரோ தலைவர் சோமநாத் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இன்னும் சிக்னல் என்பது கிடைக்கவில்லை. ஆனால் சிக்னல் என்பது வராது என கூற முடியாது. ஏனென்றால் இன்னும் காலஅவகாசம் உள்ளது. நிலவில் மொத்தம் 14 நாட்கள் பகல் பொழுது இருக்கும்.

தற்போது சூரியஒளி நிலவின் மேற்பரப்பில் விழுந்துள்ளது. தொடர்ந்து வெப்பநிலை என்பது அதிகரித்து செல்லும். இதனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் வெப்பமடைய வாய்ப்புள்ளது. இதனால் 14வது நாளில் கூட விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் செயல்பாட்டு வரலாம். இருப்பினும் இது எப்போது நடக்கும் என்பதை உறுதியாக கணித்து கூற முடியாது.

மேலும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் 2வது இன்னிங்ஸை தொடங்கும்போது இன்னும் பல நன்மைகள் இருக்கும். முதலில் செய்த ஆய்வை போல் இன்னும் நாம் மேற்கொள்ள முடியும். மேலும் ChaSTE கருவி மூலம் வேறு இடத்தில் ஆய்வு செய்ய முடியும். இதன்மூலம் புதிய தரவுகள் நமக்கு கிடைக்கலாம். இதன்மூலம் நிலவின் மேற்பரப்பில் பல இடங்களில் ஆய்வு செய்யலாம். இது நிலவின் மேற்பரப்பு குறித்து அதிகமாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது'' என்றார்.

When will Vikram Lander and Pragyan rover wakeup on moon surface? ISRO chief Somanath says this

நிலவின் தென்துருவத்தை பொறுத்தமட்டில் வெயிலாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி அதிகமாக இருக்கும். இந்தியாவில் ஒரு நாள் என்பது 12 மணிநேரம் பகலாகவும், 12 மணிநேரம் இரவாகவும் இருக்கும். ஆனால் நிலவை பொறுத்தமட்டில் 28 பூமி நாட்கள் தான் அங்கு ஒருநாளாகும். அதாவது 14 நாட்கள் பகலாகவும், 14 நாட்கள் இரவாகவும் இருக்கும். இரவில் அதிகபட்சமாக -253 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும்.

இந்த குளிரில் சோலார் பேனல்களுடன் செயல்படும் ஆய்வுக்கருவிகள் செயல்பட வாய்ப்பில்லை. இதனால் தான் லேண்டர், ரோவர் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது 2வது இன்னிங்ஸை தொடங்கும் வகையில் விக்ரம் லேண்டர், ரோவரை மீண்டும் செயல்பாட்டு கொண்டு வரும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. சந்திரயான்-3 திட்டத்தை பொறுத்தமட்டில் விக்ரம் லேண்டர் ரோவர் ஆய்வு காலம் என்பது 14 நாட்கள் தான். அதனை இரண்டும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. தற்போது 2வது இன்னிங்சை இரண்டும் தொடங்கினால் அது நமக்கான போனஸ் பாயிண்ட் போன்றது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+