‛‛மாணவ-மாணவிகளுக்கு உதவி’’.. விஜயை போல் அரசியலுக்கு வருகிறாரா நடிகர் லாரன்ஸ்? கவனிக்க வைத்த பதில்
சென்னை: மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு ராகவா லாரன்ஸ் கூறிய பதில் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் வர்ஷிணி. இவர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 592 மதிப்பெண்கள் எடுத்தார். ஏழ்மை குடும்த்தை சேர்ந்தவர் வர்ஷிணி. இவர் கல்லூரியில் படிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் சீட் வாங்கி கொடுத்தார்.

அதோடு அவரின் படிப்புக்கான கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்தை ராகவா லாரன்ஸ் நேரடியாக அவரது வீட்டுக்கு சென்று வழங்கினார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் வர்ஷிணி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சமீபத்தில் டிராக்டர்கள் வழங்கி மனதை கவர்ந்தார். இந்நிலையில் தான் வர்ஷிணிக்கு உதவித்தொகை வழங்கிய பிறகு ராகவா லாரன்ஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என்னை பார்த்து பல்வேறு பட்ட மக்கள் உதவி செய்வார்கள் என்பதற்காக தான் நான் வீடு தேடி சென்று உதவிகளை செய்து வருகிறேன் அதில் எனக்கு ஒரு சந்தோஷம் உள்ளது. கிராமங்களுக்கு சென்றால் என்னிடம் ஏகப்பட்ட மனுக்கள் தருகின்றனர். அதை படிக்க படிக்க அவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. என்னால் முடிந்த அளவில் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அந்த அளவிற்கு நான் உதவி செய்வேன். யாரிடமும் பணம் வாங்காமல் எனது சொந்த செலவில் செய்து வருகிறேன்'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா'' என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு ராகவா லாரன்ஸ், ‛‛எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் நோக்கம் எனக்கு இல்லை. இது ஒரு மாற்றத்துக்கான செல்ப் சர்வீஸ். இந்த சேவையானது கடவுளுக்கான சேவை. இது அரசியலுக்கான நோக்கம் அல்ல. அரசியல் என நினைப்பவர்கள் போகப்போக புரிந்து கொள்வார்கள்'' என்றார்.
இதன்மூலம் நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதவிகளை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். முன்னதாக நடிகர் விஜய் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பாராட்டு விழா நடத்தினார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் தான் ராகவா லாரன்சும் விஜய் பாணியில் அரசியலுக்கு வரலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் இந்த பேட்டியின் மூலம் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications