ஆம்புலன்ஸ் எங்கே சார்? செந்தில்பாலாஜியை காரில் ஹாஸ்பிடல் அழைத்து வந்தது ஏன்? ஏதாவது ஆகியிருந்தால்?
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வராமல் காரில் அழைத்து வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதுவும் காரின் பின் இருக்கையில் பக்கெட் சீட்கள் போடப்பட்டிருந்த நிலையில் அதில் படுக்க வைத்து நெஞ்சு வலி வந்தவரை அதுவும் ஒரு அமைச்சரை ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றிருப்பது விந்தையிலும் விந்தையாக உள்ளது. இது போன்ற சோதனைகள் நடத்தப்படும் போது ஆம்புலன்ஸ் வாகனத்தை முன் கூட்டியே நிறுத்தியிருக்க வேண்டும் அல்லவா.

ஆம்புலன்ஸில் அழைத்து வந்திருந்தால் வரும் வழியிலேயே அவருக்கு பல்ஸ் பார்த்திருக்கலாம், ஈசிஜி பார்த்திருக்கலாம், தேவையான முதலுதவி சிகிச்சைகள் வழங்கியிருக்கலாம். அமைச்சர் குடியிருக்கும் பகுதி ஒன்றும் புறநகர் பகுதி கூட இல்லை. ஆம்புலன்ஸை அழைத்தால் அடுத்த 5 நிமிடங்களில் அங்கு வந்து நிற்கக்கூடிய இடத்தில் தான் அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது.
அப்படியிருக்க அவரை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததன் பின்னணி மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. செந்தில்பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை காற்றோட்டமாக கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ஹாஸ்பிடல் அழைத்துச் செல்லாமல் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து வந்ததன் மர்மமும் புரியவில்லை.

மொத்தத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு என்ன சிகிச்சைகள் தரப்படுகிறது, என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற விவரம் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அவரை பார்க்க மருத்துவமனை சென்ற அவரது வழக்கறிஞர்கள், சக அமைச்சர்கள் அளித்த பேட்டியின் அடிப்படையில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேசப்படுகின்றன.












Click it and Unblock the Notifications