"இனிதான் சிக்கலே".. அதிமுகவுக்கு நெருக்கடி.. ஒரு மண்டல வாக்குகள் அப்படியே.. திமுகவுக்கு போக போகுது!
சசிகலாவின் முடிவினால் திமுகவுக்கு ஓட்டு வங்கி கூடும் என்கிறார்கள்
சென்னை: அதிமுகவுக்கு இனிதான் சிக்கல் என்று சொல்வதா? அல்லது எடப்பாடியாருக்கு ரூட் கிளியர் என்று சொல்வதா தெரியவில்லை.. ஒருவித குழப்ப மனநிலைமையையே சசிகலாவின் விலகல் முடிவு ஏற்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வர் டெல்லி சென்றபோதும் சரி, சென்னையில் அமித்ஷா, மோடியை 2 முறை சந்தித்து பேசியபோதும் சரி, கறார் முடிவிலேயே இருந்திருக்கிறார்.. சசிகலா வருகை கட்சி ரீதியாக பாதிப்பை தரும் என்பதிலும், தனிப்பட்ட முறையில் அந்த வருகை தன்னை பாதிக்கும் என்பதிலும் கலக்கத்தில் இருந்துள்ளார்.
பிரச்சாரங்கள் முழுக்க சசிகலாவுக்கு இடமில்லை என்பதை ஓங்கி ஒலிக்க சொல்லி கொண்டே இருந்தார்.. வெளிப்படையாக சசிகலா பெயரை ஒருஇடத்திலும் எடப்பாடியார் பயன்படுத்தவில்லை என்றாலும், தினகரனை பகிரங்கமாக விமர்சித்தாலே அது சசிகலாவையும் டேமேஜ் செய்துவிடும் என்பதே கணக்காக இருந்தது.

தென்மாவட்டம்
பாஜகவை பொறுத்தவரை, சசிகலா மீது எந்தவித சாப்ட் கார்னரும் இல்லை என்றாலும், திமுகவை வீழ்த்தவும், தென்மாவட்டங்களில் வாக்குகளை அள்ளவும்தான் அவரை பகடைகாயாக பயன்படுத்த நினைத்தது.. தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளுடன், சசிகலாவின் முக்குலத்தோர் சமூக வாக்குகளையும் சேர்த்து பெற்றால், திமுக தானாகவே மெஜாரிட்டியை இழக்கும் என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக இருந்தது. எவ்வளவோ அழுத்தம் தந்தும் எடப்பாடி அசரவே இல்லை..

எடப்பாடியார்
இப்போது சசிகலாவுக்கும் வேறு வழி இல்லை.. பொறுத்து பொறுத்து பார்த்தார்.. ஒருசில நபர்களை தூது அனுப்பினார்.. தன் சார்பாக அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. ஆனால், எடப்பாடியார் தன்னுடைய நிர்வாகிகளை கெட்டியாக கைப்பிடிக்குள் வைத்திருப்பது கண்டு அதிர்ந்தே விட்டார்.. தேர்தல் தேதிக்கு பிறகு எப்படியும் அதிருப்தியாளர்கள் வந்துவிடுவார்கள் என்று பார்த்தால், அதிலும் சசிகலாவுக்கு தோல்விதான்.. அப்படியானால், எடப்பாடியார் மீது உண்மையிலேயே அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நம்பிக்கை இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. இது அதிமுகவுக்கு மேலும் பலம்தான்.

சசிகலா
மற்றொருபக்கம் , தென்மாவட்டங்களில் சசிகலா இல்லாமல் வாக்குகளை எப்படி பெறுவீர்கள் என்ற பாஜகவின் கேள்விக்கும் எடப்பாடி தரப்பு பக்காவான ஸ்கெட்சை போட்டு வருகிறது.. தென்மண்டல அமைச்சர்கள்தான் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.. வைத்திலிங்கம், ஓபிஎஸ், ஆர்பி உதயகுமார், போன்றோர் தனித்தனி களரிப்போர்ட்களை தயார் செய்து, அதன்படி வியூகம் அமைத்தாலே, அமமுகவின் வாக்குகளை சிதறடிக்கலாம் என்பதே எடப்பாடியாரின் இன்னொரு திட்டமாக இருக்கிறது.

திமுக
ஆனால், இது அவ்வளவு எளிதான காரியமா என்று தெரியவில்லை.. அமமுக போட்டியிட்டாலேஅதிமுக வாக்குகள் சிதறும்.. இது தானாகவே திமுகவுக்கு பலத்தை சேர்க்கும்.. என்னதான் கொங்குமண்டலம், வடமாவட்டங்களில் ஓட்டு வங்கியை பெருக்க பிளான் செய்தாலும், தென்மண்டலத்தில் திமுகவின் கையே ஓங்கி இருக்கும் என்று இப்போதே அரசியல் நோக்கர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்... பார்ப்போம்..!
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications