எம்ஜிஆரை பிடிக்கும்.. ஸ்டாலின்தான் இனிமேல் எல்லாம்.. மக்கள் மனம் கவர்ந்த தலைவர் யார்? சூப்பர் சர்வே
சென்னை: தமிழகத்தில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் கோலோச்சியுள்ளனர். இதில் மக்களுக்கு ரொம்பவே பிடித்த தலைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள 'ஒன்இந்தியா தமிழ்' சார்பில் பல தரப்பட்ட மக்களிடமும் கருத்து கேட்டோம்.
Recommended Video
அவர்கள் கூறிய விடைகள் ஆச்சரியமாக இருந்தன. பெரும்பாலானோர் எம்ஜிஆரைத்தான் பிடிக்கும் என்றனர். குறிப்பாக பெண்கள். இதோ மக்களின் கருத்துக்கள்:

நூரி- சமூகசேவகி: எனக்கு பிடிச்ச தலைவர் புரட்சி தலைவர் எம்ஜியார்தான். அவர் கொள்கை, தான தர்மம், பிடிக்கும். அவர் மறைந்தாலும், புகழ் மறையவில்லை. சாப்பிடாமல் யாரையும் விட மாட்டார். நானும் அதையே பின்பற்றுகிறேன். மனைவி முகத்தை பார்ப்பார். தாய் வயிற்றைத்தான் பார்ப்பார். "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்" என்ற எம்ஜிஆர், கொள்கை எனக்கு பிடிக்கும்.
பக்ருதின் அலி அகமது: 8 வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். முதலில் காமராஜர் பிடிக்கும். இப்போது ஸ்டாலினை பிடிக்கும். இப்போது வலிமையான தலைவர்கள் இல்லை என்றாலும், ஸ்டாலினை விட்டால் தமிழகத்திற்கு கதி கிடையாது.
5ம் வகுப்பு மாணவர் யஷ்வந்த்: காமராஜரை ரொம்ப பிடிக்கும்.
ஜெகதீஷ்வரி- ஆசிரியர்: இந்திரா காந்தியை எனக்கு ரொம்ப பிடிக்கும். பெண்ணாக இருந்து, வெளிப்படையாக ஆட்சி செய்தவர் என்பதால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
குழந்தைகள் காப்பாளர் பணி செய்யும் பூங்கோதை: கிராமத்திலிருந்து சென்னை வந்து, சினிமாவில் எழுத்தாளராக இடத்தை பிடித்து, 5 முறை தமிழகம் ஆண்ட முதல்வர். 1976ல் பூங்கோதை என்று, எனக்கு பெயர் சூட்டியவர், கருணாநிதி. அவர்தான் எனக்கு பிடிக்கும். மலைக்கள்ளன் பட கதாநாயகி பானுமதி கதாப்பாத்திர பெயர் பூங்கோதை. ஆலடி அருணா, மகள் டாக்டர். பூங்கோதை. அவர் சமூக நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர். எனவே எனக்கு இந்த பெயரால் மகிழ்ச்சி.
இஸ்திரி தொழில் செய்யும் நடுத்தர வயது ஆண்: எனக்கு கமல்ஹாசன் பிடிக்கும். சிறு வயது முதலே, அவரை பிடிக்கும். ரசிகர் என்றும் எடுக்கலாம். வேறு எப்படியும் எடுக்கலாம். அரசியல் தலைவர் என்பதைவிட நடிகராக அவரை ரொம்ப பிடிக்கும்.
தேனீர் விற்பனை செய்யும் பெண்: எனக்கு எம்ஜிஆர் பிடிக்கும். ஏழைகளுக்கு நல்லது செய்பவர். ஏழைகளுக்கு கொடுத்து உதவுவார். சாப்பிட்டீர்களா என்றுதான் முதலில் கேட்பார். பசியோடு யாரும் இருப்பதை விரும்பாதவர் எம்ஜியார்.
லிசி- பூக்கடை வைத்திருப்பவர்: எனக்கு பிடித்த தலைவர் கேரள முதல்வர், பினராயி விஜயன். நாட்டுக்கு நல்லது செய்பவர். எனவே பிடிக்கும்.
தாரிக்- 9ம் வகுப்பு மாணவர்: எனக்கு பிடித்த தலைவர் டாக்டர்.அம்பேத்கர். அம்பேத்கர் போராட சொல்லி கொடுத்தார். நாட்டின் அரசியல் சாசனம் இயற்றியவர். சட்ட மேதை. இவ்வாறு பல தரப்பட்ட மக்களும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications