அர்ச்சனா பட்நாயக்குடன் தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் 2 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் யார் தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் இணைந்து செயல்பட இந்திய தேர்தல் ஆணையம் நியமித்த இரு அதிகாரிகளில் ஒருவர் யார் என்பது தெரியுமா?
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதற்கான தேதி இந்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த தேர்தல் நெருங்குவதால் அரசியல் கட்சிகள் பிரச்சாரம், பொதுக் கூட்டம், மக்கள் சந்திப்பு கூட்டம் என பலவற்றை நடத்தி வருகிறது. அது போல் கட்சி தலைமைகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே வேளை தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு என பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி சிவஞானம் ஐஏஎஸ் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குநர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஐஏஎஸ் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிகாரிகள் இருவரும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குடன் இணைந்து செயல்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த இருவரில் ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் யார் தெரியுமா? அவர் நடிகர் சின்னி ஜெயந்தின் மகனாவார். அப்பாவை போல் சினிமா துறைக்கு வராமல் ஐஏஎஸ் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் புவியியல் தகவல் அறிவியல் மற்றும் வரைபடவியலில் பொறியியல் பட்டம் பெற்றார்.
இதையடுத்து டெல்லி அசோகா பல்கலைக்கழகத்தில் லிபரல் ஆர்ட்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி கொண்டே யுபிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்தார். சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்ற இவருக்கு முதல் முயற்சி தோல்வியை தந்தது.
எனினும் முயன்று கடந்த 2019ஆம் ஆண்டு இரண்டாம் முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்தது. அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பிடித்து சாதனை புரிந்தார். இந்த தேர்வுக்கு தயாராகும் போது சோர்வுகளை எதிர்கொள்ள யூடியூப் சேனல்களில் தன்னம்பிக்கை தரும் உரையாடல்களை கேட்டு உற்சாகமடைந்தாராம்.
இவர் ஒரு நல்ல பாடகர், இவருக்கும் நடிப்பில் ஆர்வம் இருந்தது. இதனால் படித்து முடித்துவிட்டு நடிகராலாம் என்றிருந்தாராம். ஆனால் டெல்லியில் படித்த போது அங்கு வந்த யுபிஎஸ்சி தேர்வர்களை பார்த்து பார்த்து தனக்கும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் பூத்ததாக தெரிவித்துள்ளார். இவர் பக்தி பாடல்களை பாடும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. அண்மையில் இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
விஜய் பாடல்களுக்கு தடை.. பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்த கட்டுப்பாடு.. காரணம் இதுதான் -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
90 சீட் + முதல்வர் பதவி.. தவெக உடன் பேரமா? ஆதவ் அர்ஜுனா யாருனே தெரியாது.. நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications