சென்னை மழைக்கு இடையே! முதல் ஆளாக ரெயின் கோட்டோடு களத்திற்கு வந்த தனலட்சுமி! பூரித்த மக்கள்! யாரு இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் விடாமல் பெய்த கனமழைக்கு இடையே முதல் ஆளாக சீரமைப்பு பணிகளில் ஈடுபட்ட தனலட்சுமி சரவணன் மக்கள் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இன்று சென்னையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக்கடல் பகுதியில் திடீரென ஏற்பட்டு உள்ளதால் இந்த மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தீவிரமாக அதிகரித்து வந்த வெயிலுக்கு இடையில் ஜூன் முதல் வாரம் 2 நாட்கள் திடீரென மழை பெய்தது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.

Who is Dhanalakshmi Saravanan, the councillor working on the ground amid heavy rain in Chennai?

திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்தது.

இடையில் 1 மணி நேரம் நின்று இருந்த மழை மீண்டும் தீவிரமாக பெய்ய தொடங்கி உள்ளது. இந்த விடாத மழை காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சீரமைப்பு: இந்த மழைக்கு இடையே அதிகாலை மழை நிற்கும் முன்பே கொட்டும் மழையில் சென்னை மாநகராட்சி 96 வது வார்டு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர் தனலட்சுமி சரவணன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.

காலையில் பொழுது விடிந்து மாநகராட்சி அதிகாரிகளோ, நிர்வாகிகளோ, எம்எல்ஏக்களோ வரும் முன் வார்டு 96க்கு வந்து அங்கு மழை தேங்கி இருக்கும் இடங்களை பார்வையிட்டு தன்னுடன் வந்த ஊழியர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார்.

இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநகர உறுப்பினர் ஆவார். மழை நிற்கும் வரை காத்திருக்காமல் மழைக்கு இடையிலேயே ரெயின் கோட்டோடு சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை செய்தார். சாலையில் எங்கெல்லாம் அடைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் பார்வையிட்டு அதை சரி செய்தார். அவரின் இந்த நடவடிக்கை மக்கள் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.

தண்ணீர் தேங்கி உள்ளதா? : சென்னையில் கடந்த வாரம் விடாமல் மழை பெய்தது. தொடர்ந்து தீவிர மழை பெய்தாலும் பெரிதாக சாலைகளில் வெள்ளம் தேங்கவில்லை. மழை பெய்த சில நிமிடங்களில் வெள்ளம் வெளியேறியது.

Who is Dhanalakshmi Saravanan, the councillor working on the ground amid heavy rain in Chennai?

இதற்கு சென்னையில் அமைக்கப்பட்டு இருக்கும் வெள்ள நீர் குழாய்கள்தான் காரணம். வெள்ளம் வடிவதற்காக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் வடிகால் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதே சமயம் கத்திப்பாரா உள்ளிட்ட சப் வே பாலங்கள் உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. அங்கே தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

மழை அளவு: சென்னையில் மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பெய்துள்ளது. அதேபோல் பின் வரும் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

நந்தனம் - 11.7 செ.மீ. தரமணி - 11.7 செ.மீ. செம்பரம்பாக்கம் 10.9 செ.மீ - மேற்கு தாம்பரம் - 8 செ.மீ. நுங்கம்பாக்கம் - 6.7 செ.மீ. சென்னை தவிர்த்து காஞ்சிபுரம் - 7.9 செ.மீ. திருவள்ளூர் - 5 செ.மீ. மாவட்டங்களில் ஆகிய அளவு மழை பதிவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+