Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் ஹைகோர்ட்டில் வைத்த முக்கிய கோரிக்கை.. பொதுக்குழு வழக்கு திடீரென ஒத்திவைப்பு.. ஏன்?

அதிமுக பொதுக்குழு விசாரணை இன்று முதல் ஹைகோர்ட்டில் ஆரம்பமாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை, வரும் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, இந்த உத்தரவை நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்தார்.

அதிமுகவில் பொதுக்குழுவை நடத்த விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் கடுமையாக முயற்சித்தார்.. இதற்காக பொதுக்குழுவுக்கு தடைகோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து சார்பில் வழக்குகளும் தொடர்ந்தனர்,

ஆனால், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தும், பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்தும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11ம் தேதி காலை 9 மணிக்கு உத்தரவிட்டிருந்தார்.

 பொதுக்குழு

பொதுக்குழு

முன்னதாக, இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், எடப்பாடியின் கை மீண்டும் ஓங்கவே செய்யும்.. அப்போது ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அல்லது தீர்மானங்கள் ரத்தானால், எடப்பாடியின் அடுத்த நகர்வு என்ன என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில், புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது..

வாதங்கள்

வாதங்கள்

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, 2 நாட்களுக்கு முன்பு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.. பின்னர். நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், தாங்கள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி) முன்பாகவே வாதங்களை முன்வைக்கிறோம் என்று விளக்கம் தந்தனர்.

வாபஸ்

வாபஸ்

இதையடுத்து நீதிபதி தனக்கு எதிராக கொடுக்கப்பட்ட கடிதத்தை வாபஸ் பெற்று மனுவாகத் தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த கடிதத்தை திரும்ப பெற்ற ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அதை மனுவாக தாக்கல் செய்தனர்.. அப்போது நீதிபதி, "இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல, கீழ்த்தரமான செயல்.. தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது, ஒருவேளை திருத்தம் இருந்தால், இதுதொடர்பாக கடிதம் கொடுப்பதற்கு முன்பு என்னிடம் நீங்கள் ஆஜராகி தெரிவித்திருந்தால், நானே இந்த வழக்கில் இருந்து விலகியிருப்பேன் என்று கூறினார்..

 புதிய நீதிபதி

புதிய நீதிபதி

அதற்கு ஓபிஎஸ் தரப்பிலோ, "அந்த கடிதத்தில் உங்களுக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. இந்த வழக்கை நீங்கள் ஏற்கெனவே 2 முறை விசாரித்துள்ளதால் புதிதாக ஒரு நீதிபதி விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரினோம்" என மீண்டும் விளக்கம் தந்தனர். பிறகு, ஓபிஎஸ் தரப்பு மனுவை பதிவுசெய்துகொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவுசெய்யட்டும் என்று கூறி கூறி தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

 ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன்

இறுதியில், இந்தவழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என்று தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அறிவித்திருந்தார்.. அதன்படி, இன்றுமுதல் ஜெயச்சந்திரன் பொதுக்குழு விசாரணையை துவங்க உள்ளார்.. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான உத்தரவுகள் வந்திருந்த நிலையில், தற்போது எந்த மாதிரியான உத்தரவுகள் வெளிவர போகிறதோ தெரியவில்லை.. இப்போது வரை ஓபிஎஸ் சட்டரீதியான போராட்டங்களை கைவிடாத நிலையில், புதிய நீதிபதியை அடம்பிடித்து கேட்டு வாங்கி உள்ள நிலையில், விசாரணைகளும் எப்படி நடக்க போகிறது என்று தெரியவில்லை.. எனினும் இந்த 2 வாரத்துக்கு, அதிமுகவுக்குள் டென்ஷன் எகிறியே காணப்படும் என்று தெரிகிறது.

 என்னாகும்?

என்னாகும்?

முன்னதாக, இன்று விசாரணை நடக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுமா? அல்லது ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்படுமா? ஒருவேளை மனு தள்ளுபடி செய்யப்பட்டால், எடப்பாடியின் கை மீண்டும் ஓங்ககே செய்யும்.. அப்போது ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? அல்லது தீர்மானங்கள் ரத்தானால், எடப்பாடியின் அடுத்த நகர்வு என்ன என்றெல்லாம் யூகங்கள் றெக்கை கட்டி பறந்த நிலையில், புதிய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது..

 ஜெயச்சந்திரன்

ஜெயச்சந்திரன்

அப்போது வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.. தங்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகவில்லை என்றும், தங்கள் தரப்பு வாதங்களை அவர்தான் முன்வைக்க டெல்லியிலிருந்து வர வேண்டும், ஆனால் அவர் ஆஜராகாததால், வழக்கை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் சார்பில் கோரப்பட்டது.. இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+