குஷ்பு மருமகன் எப்போதும் "தண்ணீரில் மிதப்பவராமே"! யார் இந்த ஷ்ரவன்? அவந்திகாவுக்கு எப்படி அறிமுகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம் தான் தற்போது சோஷியல் மீடியாவின் ஹாட் டாபிக். மாப்பிள்ளை யார், அவரின் பின்னணி என்ன என்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் கூகுளில் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு விசேஷங்கள் என்றாலே ரசிகர்களுக்கு எப்போதுமே அலாதி ஆர்வம் தான். அந்த வகையில் குஷ்பு - சுந்தர் சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமண வேலைகள் படுஜோராகத் தொடங்கிவிட்டன. இதற்கான முதல் திருமணப் பத்திரிகையை டெல்லியில் பிரதமர் மோடிக்கு நேரில் வழங்கிய குஷ்பு, அடுத்ததாக தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

Kushbu Sundar

தொடர்ந்து பல விஐபிக்களுக்கு குஷ்பு பத்திரிகை வைத்து வரும் நிலையில், பல இடங்களுக்குத் தனது வருங்கால மருமகனையும் கூடவே அழைத்துச் செல்கிறார். இதனால், யார் இந்த மாப்பிள்ளை ஷ்ரவன் சீனிவாசன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அவர் சினிமா அல்லது அரசியல் வாரிசாக இருப்பாரோ என்று பலரும் கணித்து வந்தனர்.

மருமகனின் நிஜமான பின்னணி!

இந்நிலையில், தனது மருமகன் ஷ்ரவன் குறித்து குஷ்புவே சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். ஷ்ரவன் பக்கா சென்னை பையன் தான் என்றாலும், அவருக்கு சினிமா உலகோடு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் கடல் அலைகளை ஆளும் ஒரு மெர்ச்சன்ட் நேவி ஆபீஸர் (Merchant Navy Officer) ஆவார்.

அவந்திகாவும் ஷ்ரவனும் கடந்த சில காலமாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இந்த ஜோடி திருமண பந்தத்தில் இணையவுள்ளது. உயரமான அவந்திகாவிற்கு ஏற்றாற்போல ஷ்ரவனும் நல்ல உயரமாகவும், ஹேண்ட்ஸமாகவும் இருப்பதாக சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

பெற்றோர் தயவின்றி உழைக்கும் மகள்!

பிரபல இயக்குநர் சுந்தர் சி மற்றும் தயாரிப்பாளர் குஷ்பு நினைத்திருந்தால் தங்களது மகளை தமிழ் சினிமாவிலேயே பெரிய பட்ஜெட்டில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அவந்திகா சொந்த உழைப்பை மட்டுமே நம்பியுள்ளார். பெற்றோரின் எந்தப் பரிந்துரையும் இல்லாமல், அவராகவே ஆடிஷனில் கலந்துகொண்டு தான் மலையாளத்தில் வெளியான 'ஆரம்பம்' திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட குஷ்புவின் துணையின்றி தனியாகச் சென்று வந்த அவந்திகாவின் சுயசார்பு குஷ்புவிற்கு பெரும் பெருமிதத்தைத் தந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகும் அவந்திகா தொடர்ந்து நடிப்பார் என்றும், இதற்கு மாப்பிள்ளை வீட்டாரும் முழு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

மெர்ச்சன்ட் நேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கப்பல் அதிகாரியாகப் பணிபுரியும் ஷ்ரவனின் மாத சம்பளம் குறித்தும் நெட்டிசன்கள் கணக்கு போட்டு வருகின்றனர். மெர்ச்சன்ட் நேவியில் ஆரம்பக்கட்ட அதிகாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.85,000 வரையும், ஜூனியர் ஆபீஸர்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரையும் வழங்கப்படுகிறதாம். இதுவே சீனியர் கேப்டன் அந்தஸ்திற்குச் செல்லும்போது மாதத்திற்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கூட சம்பளம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி, முதல்வர் விஜய் எனப் பல விஐபிக்கள் பங்கேற்கவிருக்கும் இந்த நட்சத்திர திருமணத்திற்காக ஒட்டுமொத்த கோலிவுட்டும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+