ராகுல் காந்தியின் ‛ரைட்ஹேண்ட்’.. விஜயை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி யார்? பின்னணி
சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்ரவர்த்தி இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் அவரை சந்தித்து பேசினார். இவர்கள் 2 பேரும் 2 மணிநேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த சந்திப்பு பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் பிரவீன் சக்ரவர்த்தி யார்? அவர் ராகுல் காந்திக்கு எவ்வளவு நெருக்கமானவர்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயின் தவெக கட்சி போட்டியிட உள்ளது. இதற்கான பணிகளை விஜய் மற்றும் தவெகவினர் மேற்கொண்டு வருகின்றனர். விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தான் விஜய், காங்கிரஸ் கட்சியை தனது கூட்டணிக்கு இழுக்க நினைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலமாக சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர முடியும் என்று விஜய் கணக்கு போடுகிறார்.
அதேபோல் காங்கிரஸ் கட்சியினரும் திமுக கூட்டணி அதிக இடங்களை தராது. இதனால் தவெக கூட்டணியில் சேரலாம் என்று விரும்புவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டில் இன்று முக்கிய சந்திப்பு நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரவீன் சக்ரவர்த்தி, விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இவர்கள் 2 பேரும் சுமார் 2 மணிநேரம் வரை பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் விவகாரங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் விவாதித்துள்ளனர். குறிப்பாக கூட்டணி தொடர்பாகவும், ஆளும் திமுக தொடர்பாகவும், தமிழக அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக கூறப்படுகிறது
இந்த திடீர் சந்திப்பு என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அதோடு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கிறதா? திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியேறுகிறதா? என்ற யூகங்களை உருவாக்கி உள்ளது. இது தமிழக அரசியலிலபேசும் பொருளாகி உள்ளது. இந்நிலையில் தான் பிரவீன் காந்தி யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு: பிரவீன் சக்ரவர்த்தி இவர் அடிப்படையில் பொருளாதார நிபுணர். தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். இவர் முதலீட்டு வங்கி, மைக்ரோசாப்ட், ஐபிஎம் உள்ளிட்டவற்றில் பணியாற்றியவர். அதன்பிறகு ராகுல் காந்தி நேரடியாக அவரை காங்கிரஸ் கட்சியில் இணைய கூறினார். இதையடுத்து பிரவீன் காந்தி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2017 ல் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
இப்போது ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான நபராக உள்ளார். ரைட் ஹேண்ட் என்றே சிலர் சொல்கின்றனர். அதேபோல் ராகுல் காந்திக்கு தேர்தல் சார்ந்த வியூக வகுப்பாளர் என்றும் சொல்லப்படுகிறார். கடந்த 2023ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரிட்டன் சுற்றுப்பயணம் செய்தபோது பிரவீன் காந்தி உடன் சென்றார். தற்போது பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் புரொபஷனல் காங்கிரஸ் (Professional Congress) மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த பிரிவு என்பது காங்கிரஸ் கட்சியில் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுக்கானதாகும். அதுமட்டுமின்றி தொழில் சார்ந்த சீர்த்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை வழங்கும்.
மேலம் கடந்த 2019 ம்ஆண்டில் ப சிதம்பரம் உடன் சேர்ந்து NYAY வரைவு பணி மற்றும் காங்கிரஸ் கட்சியை நவீனப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி கொடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அதன்பிறகு கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை மற்றும் தேர்தல் சார்ந்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்கத்திலும் முக்கிய பங்காற்றினார்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க காங்கிரஸ் கட்சி கடந்த பிப்ரவரி மாதம் தனி குழுவை அமைத்தது. அந்த குழுவின் பெயர் EAGLE. அதன் உறுப்பினராகவும் பிரவீன் சக்ரவர்த்தி உள்ளார். இந்த குழுவினர் தான் ராகுல் காந்தியின் ஓட்டு திருட்டு தொடர்பான டேட்டாக்களை தயாரித்து வழங்கி வருகிறது.
மேலும் கடந்த லோக்சபா தேர்தலில் இவர் தமிழகத்தில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வம் காட்டினார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. திமுகவினருக்கும், இவருக்கும் பஞ்சாயத்து உள்ளது. இதனால் திமுக அவரை களமிறக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மயிலாடுதுறை தொகுதியில் சுதா என்பவருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியது. தற்போது அவர் எம்பியாகி உள்ளார். இப்படியான சூழலில் தான் தவெக தலைவர் விஜயை , பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.
-
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
கோவிலில் தேங்காய் உடைத்து பிரச்சாரத்தை தொடங்கிய தவெக முஸ்லிம் வேட்பாளர்கள் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்?












Click it and Unblock the Notifications