செம வேகம்..இப்படித்தான் இருக்கணும்! த்ரெட்ஸ் செயலியில் இணைந்த முதல் தமிழக அரசியல்வாதி யார் தெரியுமா
சென்னை: த்ரெட்ஸ் செயலியில் தமிழ் நாட்டை சேர்ந்த அரசியல்வாதி முதல் ஆளாக இணைந்து உள்ளார்.
சமீபத்தில் திடீரென ட்விட்டர் நிறுவனம் ப்ளூ டிக்கை நீக்குவதாக அறிவித்தது. அதன்படி ப்ளூ டிக் முறையின்றி வழங்கப்பட்டு உள்ளது. இதை நீக்க போகிறோம். மாறாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க காசு கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் ப்ளூ டிக் ஒரு மாதத்திற்கு 900 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பலரின் ப்ளூ டிக் மொத்தமாக காணாமல் போனது. பல செய்தி நிறுவனங்களின் ப்ளூ டிக்கும் நீக்கப்பட்டது. இதையடுத்துதான் தற்போது போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது.
இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று ட்விட்டரில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ட்விட்டர் விதிகளில் சமீபத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான யூசர் த்ரெட்ஸ் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க்கின் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இந்த புதிய சமூக வலைத்தளம் த்ரெட்ஸ் செயல்படும்.
ட்விட்டர் நிறுவனம் போலவே தோற்றம் கொண்ட த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.
தமிழ்நாடு அரசியல்வாதி: இந்த த்ரெட்ஸ் செயலியில் தமிழ் நாட்டை சேர்ந்த அரசியல்வாதி முதல் ஆளாக இணைந்து உள்ளார். திமுக எம்பி கனிமொழி இந்த செயலியில் முதல் ஆளாக களமிறங்கி உள்ளார். மற்ற அரசியல்வாதிகளுக்கு முன்பாக இவர் கணக்கு தொடங்கி அசத்தி உள்ளார்.
அரசியலில் இளைஞர்கள் இடையே எப்போதும் பிரபலமாக இருக்க இளைஞர்களின் செயலிகளிலும் வேகமாக இருக்க வேண்டும். அதன்படியே கனிமொழி வேகமாக செயல்பட்டு இதில் கணக்கை துவங்கி உள்ளார்.
ட்விட்டரை முந்துமா: இந்த த்ரெட்ஸ் செயலியில் பல யூசர்கள் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட 2 மணி நேரத்தில் 2 மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்து த்ரெட்ஸ் நிறுவனம் சென்று கொண்டு இருக்கிறது. ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் 2.35 பில்லியன் யூசர்கள் உள்ளனர். இந்த இன்ஸ்டாகிராம் யூசர்கள் மொத்தமாக அதன் கிளை நிறுவனமான த்ரெட்ஸ் செயலிக்கு வந்தால் த்ரெட்ஸ் செயலி ட்விட்டரை ஒரே வாரத்தில் முந்தி விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த த்ரெட்ஸ் செயலிக்கு வரிசையாக யூசர் வந்துகொண்டு இருக்கும் நிலையில்தான் அதன் லோகோ மக்கள் இடையில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications