Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகைக்கு விட்டது யாருங்க?.. அண்ணா நூலகத்தை இப்படியா பயன்படுத்துவீர்கள்: சட்டசபையில் முதல்வர் கோபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. முந்தைய ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மோசமான நிலையை அடைந்துவிட்டதாக செங்கம் தொகுதி திமுக உறுப்பினர் கிரி இன்று அவையில் குற்றச்சாட்டு வைத்ததால் பெரிய விவாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோடநாடு விவகாரம் உச்சத்தில் இருப்பதால் தினமும் இது தொடர்பாக அவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கோடநாடு விவகாரம் குறித்து சட்டசபையில் திமுகவினர் பேச கூடாது என்று எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக கோடநாடு விசாரணைக்கு எதிர்ப்பு அதிமுக அவையை புறக்கணித்த நிலையில் இன்றும் கோடநாடு விசாரணை தொடர்பாக அவையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு மத்தியில்தான் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்பான முக்கியமான விவாதமும் நடைபெற்றது.

நூற்றாண்டு நூலகம்

நூற்றாண்டு நூலகம்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக பராமரிக்கவில்லை என்று திமுக தொடக்கத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். உள்ளே நூலகம் மிக மோசமான நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது, சுவர்கள் மோசமான நிலையில் உள்ளது, இந்த நூலகத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும், இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இன்று பேச்சு

இன்று பேச்சு

அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்து இன்று சட்டசபையில் செங்கம் தொகுதி திமுக உறுப்பினர் கிரி கடுமையான கேள்விகளை வைத்தார். கடந்த ஆட்சியில் இந்த நூலகம் சரியாக பராமரிக்கப்படவில்லை. நூலகத்தை வேண்டும் என்றே கைவிட்டுவிட்டனர். இதனால் தற்போது மக்கள் பெரிய அளவில் பயன்படுத்தாமல் அந்த நூலகம் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த நூலகத்தை உடனடியாக புதுப்பித்து மக்கள் பலர் இதை பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

பதில்

பதில்

இதையடுத்து அதிமுக மூத்த உறுப்பினர் எம்எல்ஏ செங்கோட்டையன் எழுந்து நின்று இதற்கு பதில் அளித்தார். முந்தைய ஆட்சியில் அண்ணா நூலகம் நன்றாக பராமரிக்கப்பட்டது. நூலகம் நல்ல நிலையில்தான் இருந்தது. அண்ணா நூலகத்தை நாங்கள் ஒன்றும் வீணடிக்கவில்லை என்று செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து பேசினார். செங்கோட்டையன் பேசிக்கொண்டு இருக்கும்போதே எழுந்து நின்ற முதல்வர் ஸ்டாலின், அவரின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்தார்.

மறுப்பு

மறுப்பு

முதல்வர் ஸ்டாலின் தனது பதிலில், முந்தைய ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகம் பாழடிக்கப்பட்டது உண்மைதான். இதில் மறுப்பதற்கு ஒன்றும் இல்லை. இந்த நூலகம் எப்படி பாழடிக்கப்பட்டது என்றும் பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வாடகைக்கு விட்டது யார்? திருமணத்திற்கு நூலகத்தை வாடகைக்கு விட்டு அதை பாழடித்தனர் . இதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று, அதன்பின் நீதிமன்றம் கொடுத்த உத்தரவால் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் காக்கப்பட்டது.

திமுக

திமுக

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நூலகத்தை பயன்படுத்த கூடாது என்று, நீதிமன்றம் கொடுத்த உத்தரவால் இந்த நூலகம் பாதுகாக்கப்பட்டது. தற்போது திமுக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. நூலகத்தை புதுப்பித்து மீண்டும் மீட்டு எடுக்கும் பணியில் திமுக அரசு ஈடுப்பட்டு வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+